Saturday, September 19, 2015
தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டி, பாரதிநகர், ராஜீவ்நகர், பொன்னான்டி நகர் உள்ளிட்ட 22 இடங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது.
விநாயகர் சிலைகள் வைக்கும் இடத்தில் ஓலை கூரைகள் அமைக்க கூடாது. ஆஸ்பெஸ்டாஸ் கூரை மட்டுமே அமைக்க வேண்டும் என்று போலீசார் கூறி வந்தனர். அதற்கு போதிய கால அவகாசம் இல்லை. ஆகையால் அடுத்த ஆண்டு ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைப்பதாக இந்து முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று மதியம் முள்ளக்காடு ராஜீவ்நகரில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைக்காமல் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் இந்து முன்னணி மண்டல பொதுச்செயலாளர் அருள்ராஜ் மற்றும் அந்த பகுதி இந்து முன்னணி நிர்வாகிகளை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த இந்து முன்னணி மாநகர் மாவட்ட தலைவர் சிவக்குமார், துணைத்தலைவர்கள் சங்கர், மாரியப்பன், மாவட்ட செயலாளர்கள் ஆறுமுகம், ராகவேந்திரா, மண்டலத்தலைவர் மாதவன், ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்.
அவர்கள் போலீஸ் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு போலீசார் அழைத்து சென்ற நிர்வாகிகளை விடுவித்தனர்.
இதற்கிடையே கிராம நிர்வாக அலுவலர்கள் புகாரின் பேரில் அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்ததாக முத்தையாபுரம் போலீசார் இந்து முன்னணியினர் 35 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகர் 3–வது பஸ் ஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். 6–வது வார்டு அ.தி.மு.க. செயலாளரான இவர் அதே ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
0 comments:
Post a Comment