Thursday, December 31, 2015
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 51). இவர் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி எஸ்தர் ஜெனிட்டா. இவர் கொம்மடிக்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று எஸ்தர் ஜெனிட்டா தனது கணவருடன் சாத்தான்குளத்தில் உள்ள ஒரு வங்கிக்கு சென்றார். வங்கியில் ரூ.4 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் கணவருடன் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
பண்ணம்பாறை விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்து கொண்டிருந்த 2 மர்மநபர்கள் திடீரென ஜெபராஜ் மோட்டார் சைக்கிளை வழிமறித்து கணவர்– மனைவி இருவரையும் சரமாரியாக தாக்கிவிட்டு எஸ்தர் ஜெனிட்டாவிடம் இருந்த பணப்பையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர்.
இச்சம்பவம் குறித்து சாத்தான்குளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து தம்பதியை தாக்கி பணம் பறித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக சாத்தான்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நகைபறிப்பு, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. எனவே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொள்ளை கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
திருச்சி 13.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருப்பூரில் ரூ.80 லட்சம் மதிப்பிலான பனியன் ஆடைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை அனுப்பர்பாளையம் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது...
0 comments:
Post a Comment