Thursday, December 10, 2015
தூத்துக்குடியில் போலீசார் வாகன சோதனையில் ஆயுதங்களுடன் வந்த கொலை வழக்கு பிரபல ரவுடி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். 4 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தூத்துக்குடி பீச் ரோட்டில் நேற்று போலீஸ் எஸ்.ஐ ஜீவமணி தர்மாஜ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நான்கு கார்களில் வந்தவர்களை போலீசார் சோதனை செய்தனர். இதில் இரண்டு அரிவாள், மூன்று வாள்கள் வைத்திருந்தனர். துப்பாக்கி வைத்திருந்ததாக தெரியவந்தது. ஆனால் போலீசார் இதனை மறுத்துள்ளனர்.
போலீசார் விசாரணை நடத்தியதில் அசோகன் (46),சக்தி வினாயகர் நகர், ஸ்டேட்பாங்க் காலனி தூத்துக்குடியை சேர்ந்தவர். தற்போது இவர் மதுரை திடீர் நகரில் உள்ள பாஸ்கரதாஸ் நகரில் குடியிருந்து வருகிறார். இவர் தூத்துக்குடியில் உள்ள சைக்கிள் ஸ்டான்ட், கழிப்பறை உள்ளிட்டவைகளை ஏலம் எடுத்து நடத்தி வருகிறார். இந்த தொழில் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட தி.மு.க., துணை செயலாளர் ஏ.சி.அருணாவை கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்.
இவர் மீது புதுக்கோட்டை, தூத்துக்குடி மத்திய பாகம், வடபாகம்,தட்டப்பாறை போலீஸ் ஸ்டேஷன்களில்,கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்குகள் நி<லுவையில் உள்ளன. இவருடன் வருகை தந்த தூத்துக்குடி டி.எம்.பி., காலனியை சேர்ந்த மனோகரன் (45), அய்யப்பன் (45), மதுரை, ஆனையூர், முத்துநகரை சேர்ந்த ளேந்திரன் (40), தூத்துக்குடி ஜெயிலானி தெருவை சேர்ந்த பழனிவேல் (46), மில்லர்புரத்தை சேர்ந்த ராகவானந்தம் (47), ஆகிய அனைவரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
-
அகஸ்தியர் அருவி பகுதியில் மறைவிடத்தில் இளம்பெண்ணுடன் சிக்கிய போலீஸ்காரரை வனத்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர். பாபநாசம் அகஸ்தியர் அரு...
-
அரசு அனுமதியளித்த பின்னர், கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் மாவட்ட ஆட்சியர் சகாயம் தலைமையில் விசாரணை துவக்கப்படும் என, மத...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
-
தனியார் வங்கியின் பெயரில் கூடுதலாக சில எழுத்துகளைச் சேர்த்துக் கொண்டு, போலி வங்கி நடத்திய 4 பேரை தருமபுரி குற்றப் பிரிவு காவல் துறையினர் திங...
-
மதுரை திருநகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது26). இவரது மனைவி பானுபிரியா(25). இவர் கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனம் ஒன்றில் வே...
-
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுத்தமைக்காக, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் ஆகஸ்ட் 22-ஆம...
-
Share on facebook Share on twitter More Sharing Services வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இனி இணையத் த...
0 comments:
Post a Comment