Thursday, December 10, 2015
தூத்துக்குடியில் போலீசார் வாகன சோதனையில் ஆயுதங்களுடன் வந்த கொலை வழக்கு பிரபல ரவுடி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். 4 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தூத்துக்குடி பீச் ரோட்டில் நேற்று போலீஸ் எஸ்.ஐ ஜீவமணி தர்மாஜ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நான்கு கார்களில் வந்தவர்களை போலீசார் சோதனை செய்தனர். இதில் இரண்டு அரிவாள், மூன்று வாள்கள் வைத்திருந்தனர். துப்பாக்கி வைத்திருந்ததாக தெரியவந்தது. ஆனால் போலீசார் இதனை மறுத்துள்ளனர்.
போலீசார் விசாரணை நடத்தியதில் அசோகன் (46),சக்தி வினாயகர் நகர், ஸ்டேட்பாங்க் காலனி தூத்துக்குடியை சேர்ந்தவர். தற்போது இவர் மதுரை திடீர் நகரில் உள்ள பாஸ்கரதாஸ் நகரில் குடியிருந்து வருகிறார். இவர் தூத்துக்குடியில் உள்ள சைக்கிள் ஸ்டான்ட், கழிப்பறை உள்ளிட்டவைகளை ஏலம் எடுத்து நடத்தி வருகிறார். இந்த தொழில் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட தி.மு.க., துணை செயலாளர் ஏ.சி.அருணாவை கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்.
இவர் மீது புதுக்கோட்டை, தூத்துக்குடி மத்திய பாகம், வடபாகம்,தட்டப்பாறை போலீஸ் ஸ்டேஷன்களில்,கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்குகள் நி<லுவையில் உள்ளன. இவருடன் வருகை தந்த தூத்துக்குடி டி.எம்.பி., காலனியை சேர்ந்த மனோகரன் (45), அய்யப்பன் (45), மதுரை, ஆனையூர், முத்துநகரை சேர்ந்த ளேந்திரன் (40), தூத்துக்குடி ஜெயிலானி தெருவை சேர்ந்த பழனிவேல் (46), மில்லர்புரத்தை சேர்ந்த ராகவானந்தம் (47), ஆகிய அனைவரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment