Wednesday, December 16, 2015
திருச்செந்தூர் பகுதிகளில் கடந்த சிலநாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் திருச்செந்தூர் அருகேயுள்ள காயாமொழியில் உள்ள காயாமொழி குளம் நிரம்பியது. தொடர்ந்து குளத்திற்கு வரக்கூடிய நீர்வரத்தும் அதிகரித்ததால் நீர்வரும் கால்வாய் உடைந்து தண்ணீர் வெளியேறியது. இதனால் மேலஅரசூர் நடுநாலுமூலைக்கிணறு காயாமொழிக்கிடையேயான சாலையில் நீர் புகுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
இதனால் பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். இதுகுறித்து எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனிடம் பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் அவர் அப்பகுதியை ஆய்வு செய்து, கால்வாய் உடைப்பினை சரிசெய்ய சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் பொதுமக்கள் இந்த குளத்தில் முறையாக தூர்வாரப்படவில்லை என்றும் அதனாலேயே தண்ணீர் குளத்திற்கு செல்ல வழியில்லாமல் கால்வாய் உடைந்தது. வருடாவருடம் மழை வரும் காலங்களில் இப்படித்தான் நடக்கிறது. இனி வரும் காலங்களிலாவது இதனை முறையாக சரி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அவர்களிடம் வரும் காலங்களில் முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ தெரிவித்தார்.
அவருடன் திமுக ஒன்றிய செயலாளர்கள் (திருச்செந்தூர்) செங்குழி ரமேஷ், (உடன்குடி) பாலசிங், திருச்செந்தூர் நகர செயலாளர் மந்திரமூர்த்தி, ஒன்றிய தொழிலாளர் அணி துணைச்செயலாளர் ராஜமோகன், உடன்குடி ஒன்றிய பொருளாளர் வாசகன், தென்திருப்போரை டவுன் பஞ்சாயத்து தலைவர் ராமஜெயம், பஞ்சாயத்து தலைவர்கள் வரண்டியவேல் ஜனகர், அழகப்பபுரம் கண்ணன், அமிர்தலிங்கம், பரமன்குறிச்சி ஊராட்சி செயலாளர் இளங்கோ, வழக்கறிஞர் கிருபா ஆகியோர் உடன் இருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
0 comments:
Post a Comment