Saturday, March 28, 2015
திருப்பூர், : திருப்பூர் மாநகர பகுதியில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்து, அட்டை வழங்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற நிர்வாகிகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சி முழுவதும் பெரும்பாலானவர்களுக்கு ஆதார் அட்டை இன்னும் கிடைக்கவில்லை. இந்நிலையில் முதியோர் உதவித்தொகை பெறவும், காஸ் சிலிண்டர் மானியம் பெறவும், நலவாரியத்தில் பதிவு செய்வதற்கும், பாஸ்போர்ட் பெறுவதற்கும், வாக்காளர் அடையாள அட்டைக்கும் என்று பல்வேறு பணிகளுக்கு ஆதார் அட்டை அவசியம் என்று அறிவித்துள்ளனர்.
இதனால், ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுப்பதற்காகவும், அதற்கு விண்ணப்பிக்கவும் பொதுமக்கள் தினமும் அலைக்கழிக்கப்படுகிறார்கள். மேலும், அவ்வாறு விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து கொடுத்தால் அதை பதிவு செய்து புகைப்படம் எடுக்க சுமார் ஒரு ஆண்டு கழித்து வரும்படி டோக்கன் கொடுத்துள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாக தலையிட்டு பொதுமக்கள் சிரமத்தை கருத்தில் கொண்டு உடனடியாக வார்டு வாரியாக புகைப்படம் எடுத்து அட்டை வழங்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும். தற்போது மனுக்களோடு வந்துள்ள பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு அதற்கான ஒப்புகை சீட்டை வழங்கும் படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
பா.ஜ.க., 11வது வார்டு தலைவர் ரவிக்குமார் அளித்த மனுவில், சாமுண்டிபுரம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் கடந்த 3 மாதங்களாக துவரம்பருப்பு, உளுந்தம்பருப்பு, பாமாயில் போன்றவை வழங்கப்படவில்லை. கடை விற்பனையாளரிடம் கேட்டால், நுகர்பொருள் வாணிப கிட்டங்கியிலேயே இருப்பு இல்லை என்று கூறுகிறார். எனவே, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் அனைத்து பொருட்களும் மாதம்தோறும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஆம்-ஆத்மி கட்சியினர் சார்பில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகரின் முக்கிய பிரச்னையாக போக்குவரத்து நெருக்கடி இருந்து வருகிறது. உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து திருப்பூர் வரும் அனைத்து பஸ்களும் நகரத்துக்குள் வந்து செல்வது தான் போக்குவரத்து நெருக்கடிக்கு முக்கிய காரணமாக உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
திருப்பூரில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் சூழலில் அதைத் தடுப்பதற்காக புத்தகத் திருவிழாவில் பார்வையாளர்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்க...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
திருச்சி மகாராஷ்டிரா மாநிலம் பந்தபூரிலிருந்து 962 தமிழக தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் திருச்சி வருகை - தெர்மல் ஸ்கேன் மூலம்...

0 comments:
Post a Comment