Wednesday, December 23, 2015
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்ட விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இது குறித்து வங்கியின் வணிக வளர்ச்சித்துறை பொதுமேலாளர் வி.குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா வங்கியின் தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. விழாவிற்கு வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி எச்.எஸ்.உபேந்திர காமத் தலைமை வகித்தார்.
தூத்துக்குடி கிறிஸ்தவ விசுவாச ஐக்கிய சபை பால் ஆன்ட்ரூ கனகராஜ், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி வழங்கி ஜெபம் செய்தார். தொடர்ந்து வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி உபேந்திர காமத், பொதுமேலாளர்கள் கந்தவேலு, தேவதாஸ், ரவீந்திரன் ஆகியோர் அனைவருக்கும் தங்களது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்ட விழாவை முன்னிட்டு, வங்கியின் சார்பில் ஏழை ஏளிய மக்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு இலவசமாக புதிய ஆடைகள் மற்றும் போர்வைகள் வழங்கப்பட்டன. மேலும், மாற்றுத்திறனாளிக்கு இலவச மூன்று சக்கர சைக்கிளும் வழங்கப்பட்டது. இவ்விழாவில், வங்கியின் துணை பொது மேலாளர்கள், உதவிப் பொதுமேலாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
திமுக கழக மகளிரணிச் செயலாளரும் திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி அவர்கள், திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தட்டார்மடம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டையைச் சேர்ந்தவர், காசியானந்தம் (வயது 60). தொழில் அதிபர். இவர் கடந்த 12–ந் தேதி தனது வீட்டை பூட்டி வ...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
-
குடிநீர் தொட்டி கட்டும் பணி - கலெக்டர் ஜெயந்தி ஆய்வு ...
-
அண்ணாபல்கலை. விளையாட்டு போட்டி கரூர் மாணவர்கள் வெற்றி அண்ணாபல்கலை. நடத்திய விளையாட்டு போட்டியில் கரூர் ...
-
உலக தமிழ் பல்கலைக்கழகம், அமெரிக்கா. சார்பாக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழா மதுரையில் நடைபெற்றது, அதில் I T ப்ரோ சென்டரின் நிறுவனர் டாக...

0 comments:
Post a Comment