Wednesday, December 23, 2015
தூத்துக்குடி டி.என்.டி. காலனியை சேர்ந்தவர் சுதாகர். இவரது மனைவி எஸ்தர் பாலா (வயது38). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டு சுதாகர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.
இதையடுத்து கடந்த 10.7.2015 அன்று மெஞ்ஞானபுரத்தை சேர்ந்த கல்லூரி ஊழியரான வின்சென்ட் பாஸ்கர் (37) என்பவருடன் எஸ்தர் பாலாவுக்கு 2–வது திருமணம் நடைபெற்றது. அப்போது பெண் வீட்டில் இருந்து 4 பவுன் நகைகள், 1½ லட்சம் ரொக்க பணம் ஆகியவை சீர்வரிசையாக கொடுக்கப்பட்டது.
திருமணமான 17–வது நாளில் வின்சென்ட் பாஸ்கர் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த எஸ்தர் பாலா தனது கணவரை அக்கம் பக்கம் தேடி வந்தார்.
இந்த நிலையில் எஸ்தர் பாலா தனது உறவினர்களுடன் நெல்லையில் உள்ள ஒரு ஜவுளிக்கடைக்கு வந்திருந்தார்.
அப்போது அங்கு கணவர் வின்சென்ட் பாஸ்கர் வேறோரு பெண்ணுடன் சுற்றி திரிவதை கண்டு அதிர்ச்சியடைந்து உறவினர்களுடன் கூறினார். உடனே அவர்கள் அனைவரும் சேர்ந்து வின்சென்ட் பாஸ்கரை மடக்கி பிடித்து புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.
அப்போது எஸ்தர் பாலா கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வின்சென்ட் பாஸ்கர் ஏற்கனவே ஜெயந்தி, அருமை பொருட்செல்வி, சாந்தி, அனிதா ஆகிய 4 பேரை திருமணம் செய்திருப்பதும் 5–வதாக எஸ்தர் பாலாவை ஏமாற்றி திருமணம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து வின்சென்ட் பாஸ்கர் மற்றும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த புரோக்கர் திசையன் விளையை சேர்ந்த ஜான் இன்பராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
திமுக கழக மகளிரணிச் செயலாளரும் திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி அவர்கள், திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தட்டார்மடம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டையைச் சேர்ந்தவர், காசியானந்தம் (வயது 60). தொழில் அதிபர். இவர் கடந்த 12–ந் தேதி தனது வீட்டை பூட்டி வ...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
-
குடிநீர் தொட்டி கட்டும் பணி - கலெக்டர் ஜெயந்தி ஆய்வு ...
-
அண்ணாபல்கலை. விளையாட்டு போட்டி கரூர் மாணவர்கள் வெற்றி அண்ணாபல்கலை. நடத்திய விளையாட்டு போட்டியில் கரூர் ...
-
உலக தமிழ் பல்கலைக்கழகம், அமெரிக்கா. சார்பாக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழா மதுரையில் நடைபெற்றது, அதில் I T ப்ரோ சென்டரின் நிறுவனர் டாக...
0 comments:
Post a Comment