Tuesday, December 22, 2015
அரசுக் குளங்களில் மணல் எடுக்க விரும்புவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 1500/- அரசுக் கருவூலத்தில் செலுத்தி அசல் செலுத்து சீட்டுடன் உரியபடிவத்தில் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு நபர் விவசாயம் மற்றும் வீட்டு உபயோகங்களுக்காக கட்டணம் எதுவும் அரசுக்கு செலுத்தாமல் 30 கனமீட்டர், அதாவது 200 கனஅடி கொள்ளளவுடைய 5 லாரிகள், அளவுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அனுமதி பெற்று எடுத்துக்கொள்ளலாம். அதிகபட்ச அனுமதிகாலம் 10 நாட்களாகும். மேற்கண்ட சிறுகனிமங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் மாவட்ட அரசிதழில் பிரசுரம் செய்துள்ள அரசுக் குளங்களில் மட்டுமே மேற்படி கனிமங்கள் எடுக்க அனுமதிக்கப்படும்.
மேற்கூறிய 30 கனமீட்டருக்கு மேலாகவும், பிற பயன்பாடுகளுக்காகவும் அரசுக்குரிய உரிமக் கட்டணம் செலுத்தி மாவட்ட அரசிதழில் பிரசுரம் செய்துள்ள அரசுக் குளங்களில் மேற்படி கனிமங்களை எடுக்க விரும்புவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 1500/- அரசுக் கருவூலத்தில் செலுத்தி அசல் செலுத்து சீட்டுடன் உரியபடிவத்தில் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும். அரசால் இதற்கென அமைக்கப்பட்டுள்ள தனிப்பட்ட குழு விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, தகுதியுள்ள விண்ணப்பதாரர்களை தெரிவுசெய்து, அவர்களால் எடுக்கப்படவேண்டிய கனிமங்களின் அளவை நிர்ணயம் செய்யும்.
நிர்ணயிக்கப்படும் இந்த அளவினை அதிகபட்சமாக 3 மாத காலத்திற்குள் எடுத்துக்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அனுமதி வழங்குவார். அரசின் அனுமதி பெறாமலும் மாவட்ட அரசிதழில் பிரசுரம் செய்யப்படாத பிற அரசுக்குளங்களிலும் குவாரி செய்யப்படுவது கண்டுபிடிக்கப்படுமானால் உரிய குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், உரிய அபராதமும் விதிக்கப்படும் எனத்தெரிவிக்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
சாமுண்டிபுரத்தில் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக் கடையை அப்புறப்படுத்தக் கோரி அந்த கடை முன் பொதுமக்கள் திங்கள்க...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment