Tuesday, December 22, 2015
அரசுக் குளங்களில் மணல் எடுக்க விரும்புவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 1500/- அரசுக் கருவூலத்தில் செலுத்தி அசல் செலுத்து சீட்டுடன் உரியபடிவத்தில் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு நபர் விவசாயம் மற்றும் வீட்டு உபயோகங்களுக்காக கட்டணம் எதுவும் அரசுக்கு செலுத்தாமல் 30 கனமீட்டர், அதாவது 200 கனஅடி கொள்ளளவுடைய 5 லாரிகள், அளவுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அனுமதி பெற்று எடுத்துக்கொள்ளலாம். அதிகபட்ச அனுமதிகாலம் 10 நாட்களாகும். மேற்கண்ட சிறுகனிமங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் மாவட்ட அரசிதழில் பிரசுரம் செய்துள்ள அரசுக் குளங்களில் மட்டுமே மேற்படி கனிமங்கள் எடுக்க அனுமதிக்கப்படும்.
மேற்கூறிய 30 கனமீட்டருக்கு மேலாகவும், பிற பயன்பாடுகளுக்காகவும் அரசுக்குரிய உரிமக் கட்டணம் செலுத்தி மாவட்ட அரசிதழில் பிரசுரம் செய்துள்ள அரசுக் குளங்களில் மேற்படி கனிமங்களை எடுக்க விரும்புவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 1500/- அரசுக் கருவூலத்தில் செலுத்தி அசல் செலுத்து சீட்டுடன் உரியபடிவத்தில் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும். அரசால் இதற்கென அமைக்கப்பட்டுள்ள தனிப்பட்ட குழு விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, தகுதியுள்ள விண்ணப்பதாரர்களை தெரிவுசெய்து, அவர்களால் எடுக்கப்படவேண்டிய கனிமங்களின் அளவை நிர்ணயம் செய்யும்.
நிர்ணயிக்கப்படும் இந்த அளவினை அதிகபட்சமாக 3 மாத காலத்திற்குள் எடுத்துக்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அனுமதி வழங்குவார். அரசின் அனுமதி பெறாமலும் மாவட்ட அரசிதழில் பிரசுரம் செய்யப்படாத பிற அரசுக்குளங்களிலும் குவாரி செய்யப்படுவது கண்டுபிடிக்கப்படுமானால் உரிய குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், உரிய அபராதமும் விதிக்கப்படும் எனத்தெரிவிக்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி புங்கனூர் நடைபெறும் ஊராட்சி மன்றத் தேர்தலில் தாமோதரன் என்கிறவர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் அவர் கூற...
-
திருப்பூர், : திருப்பூர் மாநகர பகுதியில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்து, அட்டை வழங்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று பொதுமக...
-
திருச்சி மாவட்ட ஜேசிபி உரிமையாளர்கள் சங்க தொடக்க விழா நடைபெற்றது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நட...
-
மதுரை மாநகரில் மையப்பகுதியில் எம் ஜி ஆர் விளையாட்டு மைதானம் பல்வேறு விளையாட்டுகளின் மையமாக உள்ளது .மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்ல முயலும் குடியேற்றக்காரர்கள் கடலில் மூழ்குவதை தடுப்பதற்காக மேலும் பெரிய முயற்சிகள் மேற்க...
-
திருச்சி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் கனரா வங்கி அதிகாரிகள் சங்க பொ...
-
*திருச்சியில் 36 பேருக்கு* கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை இன்று 5 பேர் பாதிப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தகவல் திருச்சி...
0 comments:
Post a Comment