Tuesday, December 22, 2015
அரசுக் குளங்களில் மணல் எடுக்க விரும்புவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 1500/- அரசுக் கருவூலத்தில் செலுத்தி அசல் செலுத்து சீட்டுடன் உரியபடிவத்தில் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு நபர் விவசாயம் மற்றும் வீட்டு உபயோகங்களுக்காக கட்டணம் எதுவும் அரசுக்கு செலுத்தாமல் 30 கனமீட்டர், அதாவது 200 கனஅடி கொள்ளளவுடைய 5 லாரிகள், அளவுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அனுமதி பெற்று எடுத்துக்கொள்ளலாம். அதிகபட்ச அனுமதிகாலம் 10 நாட்களாகும். மேற்கண்ட சிறுகனிமங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் மாவட்ட அரசிதழில் பிரசுரம் செய்துள்ள அரசுக் குளங்களில் மட்டுமே மேற்படி கனிமங்கள் எடுக்க அனுமதிக்கப்படும்.
மேற்கூறிய 30 கனமீட்டருக்கு மேலாகவும், பிற பயன்பாடுகளுக்காகவும் அரசுக்குரிய உரிமக் கட்டணம் செலுத்தி மாவட்ட அரசிதழில் பிரசுரம் செய்துள்ள அரசுக் குளங்களில் மேற்படி கனிமங்களை எடுக்க விரும்புவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 1500/- அரசுக் கருவூலத்தில் செலுத்தி அசல் செலுத்து சீட்டுடன் உரியபடிவத்தில் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும். அரசால் இதற்கென அமைக்கப்பட்டுள்ள தனிப்பட்ட குழு விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, தகுதியுள்ள விண்ணப்பதாரர்களை தெரிவுசெய்து, அவர்களால் எடுக்கப்படவேண்டிய கனிமங்களின் அளவை நிர்ணயம் செய்யும்.
நிர்ணயிக்கப்படும் இந்த அளவினை அதிகபட்சமாக 3 மாத காலத்திற்குள் எடுத்துக்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அனுமதி வழங்குவார். அரசின் அனுமதி பெறாமலும் மாவட்ட அரசிதழில் பிரசுரம் செய்யப்படாத பிற அரசுக்குளங்களிலும் குவாரி செய்யப்படுவது கண்டுபிடிக்கப்படுமானால் உரிய குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், உரிய அபராதமும் விதிக்கப்படும் எனத்தெரிவிக்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வைகை அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், இன்னும் இரு மாதங்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறத...
-
திருச்சி திருச்சியில் அங்கீகாரம் இல்லாத குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைத்த நிலத்தடி நீர் பிரிவு அதிகாரிகள் ...
-
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை திருச்சி ஆட்சியர் சிவ...
-
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த பூர்...
-
திருச்சி டிச 17 கோரிக்கை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் தொடர் போராட்டம் - போலீஸ் அனுமதி இல்லை என்றால் தடை மீறி நடத்தப்படும் - தேசிய தெ...
-
தமிழகத்தில் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பொங்கல் என பல பண்டிகைகள் முக்கியமானதாக கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகைகள் மட்டும் இன்றி பிறந்த...
-
மதுரை மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த திமுக கவுன்சிலர்கள் பொதுமக்கள் உருவ பொம்மைக்கு நாமம் போட்டு வினோத ஆர்ப்பாட்டத்தை ம...
-
Today evening Coimbatore CBOA team ESWAR AGS and RS Mathson along with other office bearers visited E-Syndicate bank RO, (Now RO II) and h...
0 comments:
Post a Comment