Friday, December 11, 2015
தூத்துக்குடி மாவட்டத்தில் (10.12.2015) அன்று கூட்டுறவுத்துறையின் சார்பில் ரூ.3 இலட்சம் மதிப்பிலும், உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மகளிர் திட்டம் சார்பில் ரூ.17 இலட்சம் மதிப்பிலுமான வெள்ள நிவாரணப் பொருட்களை வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் கடலூர் மாவட்ட மக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.ரவி குமார்,இ.ஆ.ப., அவர்கள் அனுப்பி வைத்தார்.
இந்த வெள்ள நிவாரணப் பொருட்கள் 3 லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அனைத்து வகையான அத்தியாவசிய பொருட்களும் உள்ளன. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு தேவையான சீருடைகள், சமையல் பாத்திரம், நாப்கின்கள், போர்வை, பாய் போன்றவை அனுப்பிவைக்கப்பட்டது.
உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் அரிசி, பருப்பு வகைகள், மருந்துகள், குழந்தைகளுக்கான டையப்பர்ஸ் மற்றும் இதர அடிப்படைத் தேவைகளான சோப், பேஸ்ட், பிரஸ் போன்றவைகளும் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தூத்துக்குடி மண்டல இணைப்பதிவாளர் திரு.சி.குருமூர்த்தி, திட்ட அலுவலர் மகளிர் திட்டம் திருமதி.இந்துபாலா, மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.ஆனந்த், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர்.ஜெ.தங்கவிக்னேஷ், துணை பதிவாளர் திருமதி.ச.வீ.சிவகாமி, கூட்டுறவு ஒன்றியத் தலைவர் திரு.ஆர்.சுதாகர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.தே.ராம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக பாஜகவில் மார்ச் மாதத்துக்குள் ஒரு லட்சம் உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்று ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு நடிகரும் முன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருச்சி திருச்சியில் மளிகைப் பொருட்கள் தொகுப்பை அமைச்சர் வழங்கினார். கொரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிற...
-
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியம் கிண்ணிமங்கலம் ஊராட்சிக் குட்பட்ட கி.மீனாட்சிபட்டி, வடபழஞ்சி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமான...
-
திருட்டுத்தனமாக மணல் அள்ளிய ஜேசிபி மற்றும் டிப்பர் லாரி பறிமுதல். அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 9 பேர் கைது திருச்சி மாவட்டம் மணப்பாறை...
-
தூத்துக்குடியில் போலீசார் வாகன சோதனையில் ஆயுதங்களுடன் வந்த கொலை வழக்கு பிரபல ரவுடி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். 4 கார்கள் பறிமுதல் செ...
-
திருப்பூர் அருகே காவலரைப் போல் நடித்து பனியன் தொழிலாளியின் சைக்கிளைப் பறித்து சென்ற இளைஞரை அனுப்பர்பாளையம் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது ச...
-
திருச்சி கோ அபிஷேகபுரம் கோட்டத்தில் 75ஆவது சுதந்திர தின விழா உதவி ஆணையர் செல்வ பாலாஜி தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது திருச்சி 75 சுதந...
-
*இன்டேன் LPG நுகர்வோரின் கவனத்திற்கு* *இன்டேன் LPG சிலிண்டரானது டெலிவரிக்கு முந்தைய பரிசோதனைகளான தரம் மற்றும் எடை பரிசோதனை உறுதி செ...

0 comments:
Post a Comment