Friday, December 11, 2015
தூத்துக்குடி மாவட்டத்தில் (10.12.2015) அன்று கூட்டுறவுத்துறையின் சார்பில் ரூ.3 இலட்சம் மதிப்பிலும், உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மகளிர் திட்டம் சார்பில் ரூ.17 இலட்சம் மதிப்பிலுமான வெள்ள நிவாரணப் பொருட்களை வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் கடலூர் மாவட்ட மக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.ரவி குமார்,இ.ஆ.ப., அவர்கள் அனுப்பி வைத்தார்.
இந்த வெள்ள நிவாரணப் பொருட்கள் 3 லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அனைத்து வகையான அத்தியாவசிய பொருட்களும் உள்ளன. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு தேவையான சீருடைகள், சமையல் பாத்திரம், நாப்கின்கள், போர்வை, பாய் போன்றவை அனுப்பிவைக்கப்பட்டது.
உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் அரிசி, பருப்பு வகைகள், மருந்துகள், குழந்தைகளுக்கான டையப்பர்ஸ் மற்றும் இதர அடிப்படைத் தேவைகளான சோப், பேஸ்ட், பிரஸ் போன்றவைகளும் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தூத்துக்குடி மண்டல இணைப்பதிவாளர் திரு.சி.குருமூர்த்தி, திட்ட அலுவலர் மகளிர் திட்டம் திருமதி.இந்துபாலா, மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.ஆனந்த், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர்.ஜெ.தங்கவிக்னேஷ், துணை பதிவாளர் திருமதி.ச.வீ.சிவகாமி, கூட்டுறவு ஒன்றியத் தலைவர் திரு.ஆர்.சுதாகர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.தே.ராம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
மே தின விழாவை திமுகவினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அக்கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கேட்டுக்கொண்டுள...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...

0 comments:
Post a Comment