Friday, December 11, 2015
தூத்துக்குடி மாவட்டத்தில் (10.12.2015) அன்று கூட்டுறவுத்துறையின் சார்பில் ரூ.3 இலட்சம் மதிப்பிலும், உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மகளிர் திட்டம் சார்பில் ரூ.17 இலட்சம் மதிப்பிலுமான வெள்ள நிவாரணப் பொருட்களை வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் கடலூர் மாவட்ட மக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.ரவி குமார்,இ.ஆ.ப., அவர்கள் அனுப்பி வைத்தார்.
இந்த வெள்ள நிவாரணப் பொருட்கள் 3 லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அனைத்து வகையான அத்தியாவசிய பொருட்களும் உள்ளன. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு தேவையான சீருடைகள், சமையல் பாத்திரம், நாப்கின்கள், போர்வை, பாய் போன்றவை அனுப்பிவைக்கப்பட்டது.
உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் அரிசி, பருப்பு வகைகள், மருந்துகள், குழந்தைகளுக்கான டையப்பர்ஸ் மற்றும் இதர அடிப்படைத் தேவைகளான சோப், பேஸ்ட், பிரஸ் போன்றவைகளும் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தூத்துக்குடி மண்டல இணைப்பதிவாளர் திரு.சி.குருமூர்த்தி, திட்ட அலுவலர் மகளிர் திட்டம் திருமதி.இந்துபாலா, மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.ஆனந்த், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர்.ஜெ.தங்கவிக்னேஷ், துணை பதிவாளர் திருமதி.ச.வீ.சிவகாமி, கூட்டுறவு ஒன்றியத் தலைவர் திரு.ஆர்.சுதாகர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.தே.ராம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
-
அகஸ்தியர் அருவி பகுதியில் மறைவிடத்தில் இளம்பெண்ணுடன் சிக்கிய போலீஸ்காரரை வனத்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர். பாபநாசம் அகஸ்தியர் அரு...
-
அரசு அனுமதியளித்த பின்னர், கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் மாவட்ட ஆட்சியர் சகாயம் தலைமையில் விசாரணை துவக்கப்படும் என, மத...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
-
தனியார் வங்கியின் பெயரில் கூடுதலாக சில எழுத்துகளைச் சேர்த்துக் கொண்டு, போலி வங்கி நடத்திய 4 பேரை தருமபுரி குற்றப் பிரிவு காவல் துறையினர் திங...
-
மதுரை திருநகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது26). இவரது மனைவி பானுபிரியா(25). இவர் கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனம் ஒன்றில் வே...
-
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுத்தமைக்காக, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் ஆகஸ்ட் 22-ஆம...
-
Share on facebook Share on twitter More Sharing Services வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இனி இணையத் த...

0 comments:
Post a Comment