Saturday, January 09, 2016
தூத்துக்குடி மாவட்டம் கொப்பம்பட்டி செமப்புதூரை சேர்ந்தவர் சுப்பையா (வயது 45) கொத்தனார். இவருடைய மனைவி பரமேசுவரி (32). இவர்களுக்கு அஜித் (10), கலைச்செல்வம் (9), முனிய சாமி (7) ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.
சுப்பையாவுக்கு குடிப் பழக்கம் இருந்து வந்தது. இதனால் மது குடித்து விட்டு அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்தார். வீட்டில் செலவுக்கு சரிவர பணம் கொடுக்காமல் இருந்து வந்தார். கடந்த 8.3.14 அன்று இரவு சுப்பையா மது குடித்து விட்டு வீட்டுக்கு சென்றார். அங்கு சாப்பிடும் போது, செலவுக்கு பணம் கொடுக்காமல் குடித்துவிட்டு வருவதை பரமேசுவரி கண்டித்தார்.
இதில் ஆத்திரம் அடைந்த சுப்பையா வீட்டில் இருந்த மண்ணெண்ணையை பரமேஸ்வரி மீது ஊற்றி தீவைத்து கொளுத்தி விட்டார். இதில் உடல் கருகிய நிலையில் பரமேஸ்வரி சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டார். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கொப்பம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி புளோரா குற்றம் சாட்டப்பட்ட சுப்பையாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
அப்போது, தண்டனை விதிக்கப்பட்ட சுப்பையா நான் ஜெயிலுக்கு போனால் எனது 3 குழந்தைகளும் அனாதையாகி விடும் என்று கூறி நீதிபதியிடம் கண்ணீர் விட்டு கதறினார். இதையடுத்து 3 சிறுவர்களையும், குழந்தைகள் நலக்குழு மூலம் படிக்க வைப்பதற்கு நீதிபதி உத்தரவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
மே தின விழாவை திமுகவினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அக்கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கேட்டுக்கொண்டுள...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
0 comments:
Post a Comment