Tuesday, September 27, 2016
திருப்பூர்உள்ளாட்சி தேர்தலையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்ய வருகிற 3–ந் தேதி கடைசி நாள் ஆகும். அரசு விடுமுறை அல்லாத நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனு பெறப்படும்.இதையொட்டி அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் வேட்பு மனு பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மேலும் வேட்புமனு தாக்கல் செய்யும் உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் பலத்த போலீஸ்பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.வேட்பு மனுதாக்கல் தொடங்கிய முதல் நாளான நேற்று மாவட்டம் முழுவதும் ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 52 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கும், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கும், ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.இதுபோல் திருப்பூர் மாநகராட்சி மற்றும் பல்லடம், வெள்ளகோவில், தாராபுரம், உடுமலை, காங்கேயம் ஆகிய 5 நகராட்சிகள் மற்றும் 16 பேரூராட்சிகளிலும் வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கும் நேற்று யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. ஆனால் ஏராளமானோர் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் சென்று வேட்பு மனுக்களை வாங்கி சென்றனர்
Total Pageviews
News
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment