Monday, September 26, 2016
தாராபுரம்,தாராபுரம் அருகே அரசு பஸ்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 3 வயது குழந்தையின் ஒரு கை துண்டான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.பஸ்கள் மோதல்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள சேவக்கம்பட்டியைச்சேர்ந்தவர் மணிகண்டன் விவசாயி. இவரது மனைவி அனிதா இவர்களுக்கு தேஷிகா என்ற 3 வயது பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று மணிகண்டன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். பஸ்சில் பின்பக்க இருக்கையில் அனிதா குழந்தையுடன் ஜன்னல் ஓரமாக உட்கார்ந்திருந்தார்.பஸ் தாராபுரம் திருப்பூர் சாலையில் காதப்புள்ளபட்டிக்கு முன்புள்ள தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தது. குழந்தை தனது வலது கையை வெளியே நீட்டி விளையாடிக்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது கோவையிலிருந்து திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ், மணிகண்டன் பயணம் செய்த அரசு பஸ்சின் பின்பகுதியில் மோதியதால் விபத்து ஏற்பட்டது.வலது கை துண்டானதுஇந்த விபத்தில் குழந்தை தேஷிகாவின் வலது கை அதே இடத்தில் துண்டாகி கீழே விழுந்து விட்டது. உடனே அங்கிருந்தவர்கள் குழந்தை தேஷிகாவையும், துண்டாகிக்கிடந்த குழந்தையின் கையையும் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு குழந்தைக்கு முதல் உதவிகள் செய்யப்பட்டது. துண்டான கையை டாக்டர்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்து பத்திரப்படுத்தினார்கள்.பிறகு தேஷிகாவோடு அவரது கையையும் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு தேஷிகாவின் துண்டான கையை மீண்டும் பொருத்துவதற்கான சிகிச்சைகள் நடைபெற்று வருகிறது. விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில் 3 வயது பெண் குழந்தையின் கை துண்டான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment