Thursday, September 29, 2016
பாரதீய ஜனதா பிரமுகர் கடைக்கு தீ வைப்பு சம்பவத்தால் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சாலை மறியல் போராட்டம்திருப்பூர் காங்கேயம் கிராஸ் ரோட்டில் உள்ள பாரதீய ஜனதா கட்சி பிரமுகரின் கடைக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் திருப்பூருக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இந்து முன்னணி மற்றும் பாரதீய ஜனதா அமைப்பாளர்கள், தொண்டர்கள் மத்தியில் காட்டுத்தீ போல பரவியது. உடனடியாக அங்கு 50–க்கும் மேற்பட்டோர் திரண்டனர். இதனால் அங்கு திடீரென பதற்றமான சூழல் ஏற்பட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள ஒரு சில கடைகளும் அடைக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்டனர். இந்த நிலையில் அங்கு திரண்ட பாரதீய ஜனதா, இந்து முன்னணி நிர்வாகிகள், தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த கோரியும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் காங்கேயம் கிராஸ் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.போலீசார் உறுதி
மேலும் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கோஷங்களையும் எழுப்பினார்கள். அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்ததை தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் போலீசார் அறிவுறுத்தலின்படி அந்த பகுதியில் உள்ள கடைகளும் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்பட ஆரம்பித்தது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் 30 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment