Thursday, September 22, 2016
தாராபுரம்தாராபுரம் பஸ் நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் விடப்பட்ட 1½ வயது பெண் குழந்தை, குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.1½ வயது பெண் குழந்தை
தாராபுரம் பஸ் நிலையத்தில் நேற்று அதிகாலை 3 மணிக்கு சுமார் 1½ வயதுள்ள பெண் குழந்தை ஒன்று நடைபாதையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்துள்ளது. ஆதரவற்ற நிலையில் இருந்த அந்த குழந்தை, சற்று நேரத்திற்கு பிறகு கண்விழித்ததும் ‘‘அம்மா... அம்மா’’ என்று அழுது கொண்டு அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருந்தது.ஆதரவற்ற நிலையில் அழுது கொண்டிருந்த அந்த குழந்தையை பஸ் நிலையத்தில் இருந்த கடைக்காரர்கள் தூக்கி வைத்துகொண்டனர். பிறகு குழந்தையின் பெற்றோர் அருகே எங்காவது இருக்கிறார்களா? என்று தேடி பார்த்துள்ளனர். நீண்ட நேரமாகியும் குழந்தையைத்தேடி யாரும் வராததால், தாராபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல்கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் பஸ் நிலையத்திற்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டு தாராபுரம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.பின்னர் நேற்றுகாலை பஸ் நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் உள்ளவர்களுக்கு, குழந்தை பற்றி தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அப்பகுதியைச்சேர்ந்த பெண்கள் போலீஸ் நிலையத்திற்கு வந்து குழந்தையை பார்த்துச்சென்றனர். யாருக்கும் குழந்தை பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை.குழந்தை அழகாக இருந்ததால் ஒரு சிலர் வளர்க்க தங்களிடம் குழந்தையை கொடுக்கும்படி போலீசாரிடம் கேட்டனர். குழந்தையை தரமறுத்த போலீசார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மற்றும் சைல்டு லைன் குழந்தைகள் காப்பகம் ஆகியவற்றிற்கு தகவல் கொடுத்தனர்.குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைப்பு
அதனைத்தொடர்ந்து சைல்டு லைன் ஊழியர் வளர்மதி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர் ராஜசேகர் ஆகியோர் தாராபுரம் வந்தனர். போலீசார் முறைப்படி குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்தனர். அதன் பிறகு குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு திருப்பூரில் உள்ள குழந்தைகள் நலக்குழுவிடம் (கோர்ட்) ஒப்படைக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் பஸ் நிலையத்தில் 1½ வயது பெண் குழந்தையை பெற்றோர் விட்டுச்சென்ற சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது
Total Pageviews
News
Pages
Popular Posts
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...
0 comments:
Post a Comment