Friday, September 30, 2016
திருப்பூர், பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டு திட்டத்தின் மாவட்ட கண்காணிப்புக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் எஸ்.ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது, ‘ பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் வருவாய் கிராம அளவிலான பயிர் அறுவடை அடிப்படையில் இழப்பீடு வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பயிர்க்கடன் பெறும் விவசாயிகள் கட்டாயம் இந்த திட்டத்தில் இணைக்கப்படுவர். கடன் பெறாதவர்கள், கரீப் பருவத்தில் காப்பீட்டுத்தொகையில் 2 சதவீதமும், ரபி பருவத்தில் 1.5 சதவீதமும் செலுத்தி பயிர்க்காப்பீடு செய்யலாம். வர்த்தக மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீட்டு தொகையில் 5 சதவீதம் செலுத்த வேண்டும். மீதமுள்ள காப்பீட்டு கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் செலுத்தும். இழப்பீட்டு தொகை முழுவதும் காப்பீட்டு நிறுவனமே வழங்கும்.இந்த காப்பீட்டுத்திட்டத்தில் பருவம் தொடங்கும் முன் மழை பொய்த்தாலும், விதைப்புக்கு பிறகு மழை பொய்த்து போனாலும், காப்பீடு தொகையில் 25 சதவீதம் வரை இழப்பீடு பெறலாம். அறுவடைக்கு பின், தானியங்களை உலர வைக்க வேண்டிய பயிர்கள் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டாலும் இழப்பீடு கிடைக்கும்’ என்றார்.கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குமார், வேளாண்மை இணை இயக்குனர் ரங்கநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அல்டாப் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
*புதிய வகை* *ஆன்லைன் மோசடி:* *டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை* தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர். தமிழக போலீ...
0 comments:
Post a Comment