Wednesday, April 26, 2017
கோடநாடு எஸ்டேட் காவலாளியை கொன்ற கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா கூறினார். இதுகுறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா கூறியதாவது:–
கொலை
கோடநாடு எஸ்டேட்டுக்கு வாகனங்களில் சென்ற கும்பல் 10–வது நுழைவு வாயிலில் பணியில் இருந்த நேபாள நாட்டை சேர்ந்த காவலாளி ஓம் பகதூரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். அவருடன் பணியில் இருந்த மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூரை கத்தியால் வெட்டி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
பின்னர் அந்த கும்பல் பங்களாவின் கதவை உடைக்க முடியாததால் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அதற்குள் சத்தம் கேட்டு ஊழியர்கள் அங்கு திரண்டதால், கொலையாளிகள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
5 தனிப்படைகள் அமைப்பு
இது தொடர்பாக சம்பவ இடத்துக்கு 15 மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். கொள்ளை முயற்சியில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். மேலும் ஆவணங்களை திருடிச்சென்றுள்ளனரா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. ஆனால் எஸ்டேட்டுக்குள் இருந்து எந்த பொருளும் திருட்டு போகவில்லை. இந்த சம்பவங்கள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...

0 comments:
Post a Comment