Thursday, May 30, 2019
திருச்சி
உதயநிதிக்கு இளைஞர் அணியில் பதவி கொடுக்க வேண்டும் - திருச்சி திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
திருச்சி தெற்கு, வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் இன்று கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. அவைத்தலைவர் அம்பிகாபதி தலைமை வைத்தார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலாளருமான கே.என் நேரு பேசுகையில், வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடத்த ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் தமிழகத்தில் ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் முதலாவதாக திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் ஜூன் 15ஆம் தேதி நன்றி அறிவிப்பு கூட்டம் நடக்கிறது. இதில் திருச்சி தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெறச் செய்ததற்காக ஒருங்கிணைந்த நன்றி அறிவிப்பு கூட்டம் ஆக இது நடத்தப்படுகிறது. அன்றைய தினம் மாலை கலைஞர் அறிவாலயத்தில் கருணாநிதியின் சிலையை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அடுத்த கட்டமாக வரும் ஜூன் 3ம் தேதி திமுக தலை கருணாநிதி 97வது பிறந்த நாளை முன்னிட்டு அந்தந்த பகுதிகளில் கொடியேற்றி இனிப்பு வழங்க வேண்டும். தமிழகத்திலும், மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று நம்பிக்கையுடன் மக்கள் அதிக அளவில் திமுக கூட்டணிக்கு வாக்களித்து உள்ளனர். தேர்தல் முடிவுக்கு பின்னர் தான் கடன்களை செலுத்த விவசாயிகள் முன்வந்துள்ளனர். இன்னும் ஒரு ஆண்டு இதே நிலைதான் நீடிக்கும். அதனால் நமது சிறப்பான பணியை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். தொடர்ந்து பணியாற்றினால் 1971 ஆம் ஆண்டு திமுக 210 தொகுதிகளில் வெற்றி பெற்றது போல் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறலாம். திமுக தலைவர் ஸ்டாலின் மீது பிரதமர் மோடி அதிக அளவில் கோபத்தில் உள்ளார். அதனால் தான் அவரது பதவி ஏற்பு விழாவுக்கு கூட ஸ்டாலினை அழைக்கவில்லை. இதுபோன்ற எதிர்ப்புகளை மீறி தான் நாம் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும். டெல்டாவில் திமுகவை தவிர வேறு எந்த கட்சியும் வெற்றி பெறமுடியாத நிலையை உருவாக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டம் காரணமாக டெல்டாவில் பலத்த எதிர்ப்பு நிலவுகிறது. சிறுபான்மை இன மக்களை சமமாக நடத்துவோம் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார் அதற்கு ஏற்ப நாம் செயல்பட வேண்டும். ஏனெனில் உதயநிதி ஸ்டாலினை நியமிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட செயலாளர்களும் வலியுறுத்தியுள்ளோம் இந்த செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது உள்ளது என்றார். கூட்டத்தில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்தமைக்கு நன்றி தெரிவிப்பது, கடுமையான தேர்தல் பணியாற்றிய திமுக தலைவருக்கு நன்றி தெரிவித்தும், உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி பதவி நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் திருச்சி மாநகர செயலாளர் அன்பழகன், எம்எல்ஏ சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி தெற்கு, வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் இன்று கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. அவைத்தலைவர் அம்பிகாபதி தலைமை வைத்தார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலாளருமான கே.என் நேரு பேசுகையில், வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடத்த ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் தமிழகத்தில் ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் முதலாவதாக திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் ஜூன் 15ஆம் தேதி நன்றி அறிவிப்பு கூட்டம் நடக்கிறது. இதில் திருச்சி தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெறச் செய்ததற்காக ஒருங்கிணைந்த நன்றி அறிவிப்பு கூட்டம் ஆக இது நடத்தப்படுகிறது. அன்றைய தினம் மாலை கலைஞர் அறிவாலயத்தில் கருணாநிதியின் சிலையை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அடுத்த கட்டமாக வரும் ஜூன் 3ம் தேதி திமுக தலை கருணாநிதி 97வது பிறந்த நாளை முன்னிட்டு அந்தந்த பகுதிகளில் கொடியேற்றி இனிப்பு வழங்க வேண்டும். தமிழகத்திலும், மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று நம்பிக்கையுடன் மக்கள் அதிக அளவில் திமுக கூட்டணிக்கு வாக்களித்து உள்ளனர். தேர்தல் முடிவுக்கு பின்னர் தான் கடன்களை செலுத்த விவசாயிகள் முன்வந்துள்ளனர். இன்னும் ஒரு ஆண்டு இதே நிலைதான் நீடிக்கும். அதனால் நமது சிறப்பான பணியை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். தொடர்ந்து பணியாற்றினால் 1971 ஆம் ஆண்டு திமுக 210 தொகுதிகளில் வெற்றி பெற்றது போல் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறலாம். திமுக தலைவர் ஸ்டாலின் மீது பிரதமர் மோடி அதிக அளவில் கோபத்தில் உள்ளார். அதனால் தான் அவரது பதவி ஏற்பு விழாவுக்கு கூட ஸ்டாலினை அழைக்கவில்லை. இதுபோன்ற எதிர்ப்புகளை மீறி தான் நாம் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும். டெல்டாவில் திமுகவை தவிர வேறு எந்த கட்சியும் வெற்றி பெறமுடியாத நிலையை உருவாக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டம் காரணமாக டெல்டாவில் பலத்த எதிர்ப்பு நிலவுகிறது. சிறுபான்மை இன மக்களை சமமாக நடத்துவோம் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார் அதற்கு ஏற்ப நாம் செயல்பட வேண்டும். ஏனெனில் உதயநிதி ஸ்டாலினை நியமிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட செயலாளர்களும் வலியுறுத்தியுள்ளோம் இந்த செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது உள்ளது என்றார். கூட்டத்தில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்தமைக்கு நன்றி தெரிவிப்பது, கடுமையான தேர்தல் பணியாற்றிய திமுக தலைவருக்கு நன்றி தெரிவித்தும், உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி பதவி நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் திருச்சி மாநகர செயலாளர் அன்பழகன், எம்எல்ஏ சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
0 comments:
Post a Comment