Friday, March 13, 2020

On Friday, March 13, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 13

டெல்லியில் பாப்புலர் ஃப்ரண்ட் இஸ்லாமிய அமைப்பன் மாநில நிர்வாகிகள் கைதை கண்டித்து திருச்சியில் கண்டன போராட்டம்

இந்தியா முழுவதும் சி.ஏ.ஏ. என்.சி.ஆர், என்.பி.ஆ சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லி காவல்துறையினர் பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களை வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறைக்கு காரணமென பொய்யாக தொடர்புபடுத்தி கைது  செய்து வருகின்றனர். சங்பரிவார் மற்றும் டெல்லி காவல்துறை இருவரும் இதற்கு பொறுப்பாவர்கள்.


ஒரு ஜனநாயக போராட்டத்திற்கான ஈடுபட்டிருந்த நிலையில், பாப்புலர் ஃப்ரண்டின் டெல்லி மாநில தலைவர் பர்வேஸ் அகமது, மாநில செயலாளர் முகமது இலியாஸ், மாநில அலுவலக செயலாளர் முகீத் ஆகியோர் டெல்லி காவல்துறையால் கைது செய்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மற்றொரு பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர் டானிஷ் கைது செய்யப்பட்டார். மேலும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை அவதூறு செய்வதற்கான தொடர் பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்த போக்கை கண்டித்து
மரக்கடை, ராமகிருஷ்ணா பாலம் அருகில்  மாவட்டச் செயலாளர்,
முஜிபுர் ரஹ்மான் தலைமையில் ,
கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.
இதில் SDPI மாவட்ட தலைவர் ஹஸ்ஸான் மற்றும் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் 200க்கு மேற்பட்டோர் கலந்து ெகாண்டனர்.

பேட்டி :
முஜிபுர் ரஹ்மான்
மாவட்ட தலைவர் .
பாபுலர் பரண்ட்ஸ் ஆஃப் இந்தியா


0 comments: