Friday, March 27, 2020
On Friday, March 27, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், கடந்த 22ஆம் தேதி துபாயில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த ஈரோட்டை சேர்ந்த 24 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று திருச்சி அரசு மருத்துவமனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவரோடு பயணம் செய்த நாகை, திருவாரூர், தஞ்சை, பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களுக்கு தொற்று இல்லை. எனினும் அவர்கள் வீடுகளில் வைத்து அந்தந்த மாவட்ட நிர்வாகத்தால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்றின் பயங்கரம் புரியாமல் மக்கள் இன்னும் அஜாக்கிரதையாக செயல்படுகின்றனர். இருசக்கர வாகனங்களில் பலர் வீதிகளில் உலா வருகின்றனர்.
கிராமப்புறங்களில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். கரோனா வைரஸ் தாக்குதலின் விளைவு தற்போது தெரியாது. தொற்று ஏற்பட்டால் தான் அதன் வீரியம் தெரியவரும். மருத்துவமனைக்கு செல்வோர் மற்றும் காய்கறி வாங்குவோர் மட்டுமே இருசக்கர வாகனங்களில் வரலாம். தேவையற்ற காரணங்களுக்காக இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கண்டிப்பாக மாஸ்க் அணிந்து தான் வெளியில் வரவேண்டும். தேவையற்ற காரணங்களுக்காக வெளியில் வந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும். அந்த வாகனத்தை திரும்ப பெற முடியாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை 11 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 127 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி காந்தி மார்க்கெட்டில் செயல்படும் காய்கறி கடைகள் பொன்மலை ஜி கார்னர் பகுதிக்கு மாற்றப்பட உள்ளது. வரும் திங்கள்கிழமை முதல் காந்தி சந்தை பொன்மலை ஜி கார்னரில் செயல்படும். இங்கு பொதுமக்களும் வந்து காய்கறிகளைவாங்கி செல்லலாம். இதேபோல் திருச்சி மாவட்டத்தில் செயல்படுமா 6 உழவர் சந்தைகள் பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களுக்கு மாற்றப்படும். இங்கு திறந்தவெளியில் செயல்படும் உழவர் சந்தையில் மக்கள் காய்கறிகளை வாங்கிச் செல்லலாம். திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை மத்திய பேருந்து நிலைய வளாகத்திற்கு மாற்றப்படும். திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் நேந்திரம் வாழை தார்கள் அறுவடை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக புகார் வந்தது. இது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டு அவற்றை அறுவடை செய்யவும், வாகனங்களில் கேரளாவுக்கு ஏற்றிச் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...

0 comments:
Post a Comment