Sunday, March 15, 2020
On Sunday, March 15, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
எஸ்டிபிஐ கட்சி மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. கட்சியின் தேசிய தலைவர் பைஜி தலைமை வகித்தார்.
தேசிய பொதுச் செயலாளர் அப்துல் மஜீத், மாநில தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளரிடம் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறுகையில், தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 48 இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது என்பிஆர்.க்கு எவ்வித ஆவணமும் வழங்க வேண்டியதில்லை. 'டி' பிரிவு குடிமக்கள் என்று கணக்கெடுப்பின்போது குறிப்பிடப்படாது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக தலைமைச் செயலாளர் தெரிவித்தார். எனினும் என்பிஆர்.க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு எதிராக நடைபெறும் ஒத்துழையாமை இயக்கத்தில் எஸ்டிபிஐ கட்சி பங்கேற்கும். தமிழக அரசு நிச்சயம் தீர்மானம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. என் ஆர் பி க்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினாலும் தேசிய குடியுரிமை சட்டத்திதை கண்டித்து மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் தொடரும்.
பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர்களின் தூண்டுதலின் பேரில்தான் டெல்லியில் கலவரம் நடைபெற்றது. இது முற்றிலும் இனக்கலவரம் தான். இதில் பாதிக்கப்பட்ட காவல்துறையினருக்கு எவ்வாறு நஷ்டஈடு வழங்கப்பட்டதோ அதேபோல் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினருக்கும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். காவிரி டெல்டா பாதுகாப்பு வேளாண் மண்டலத்தை வரவேற்கிறோம். அதேசமயம் இதில் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை தீர்த்து முழுமையான ஒரு சட்டமாக கொண்டுவர வேண்டும். மேலும் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் இதர பகுதிகளுக்கான நகராட்சி, மாநகராட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றார்.
அப்போது செய்தியாளரிடம் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறுகையில், தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 48 இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது என்பிஆர்.க்கு எவ்வித ஆவணமும் வழங்க வேண்டியதில்லை. 'டி' பிரிவு குடிமக்கள் என்று கணக்கெடுப்பின்போது குறிப்பிடப்படாது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக தலைமைச் செயலாளர் தெரிவித்தார். எனினும் என்பிஆர்.க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு எதிராக நடைபெறும் ஒத்துழையாமை இயக்கத்தில் எஸ்டிபிஐ கட்சி பங்கேற்கும். தமிழக அரசு நிச்சயம் தீர்மானம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. என் ஆர் பி க்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினாலும் தேசிய குடியுரிமை சட்டத்திதை கண்டித்து மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் தொடரும்.
பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர்களின் தூண்டுதலின் பேரில்தான் டெல்லியில் கலவரம் நடைபெற்றது. இது முற்றிலும் இனக்கலவரம் தான். இதில் பாதிக்கப்பட்ட காவல்துறையினருக்கு எவ்வாறு நஷ்டஈடு வழங்கப்பட்டதோ அதேபோல் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினருக்கும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். காவிரி டெல்டா பாதுகாப்பு வேளாண் மண்டலத்தை வரவேற்கிறோம். அதேசமயம் இதில் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை தீர்த்து முழுமையான ஒரு சட்டமாக கொண்டுவர வேண்டும். மேலும் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் இதர பகுதிகளுக்கான நகராட்சி, மாநகராட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
0 comments:
Post a Comment