Sunday, March 15, 2020
On Sunday, March 15, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி
தனியார் உடற்பயிற்சி கூடத்தில் நீராவி குளியலில் ஈடுபட்ட இளைஞரின் கால் வெந்துபோன பரிதாப சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி கேகே நகர், கோவர்தன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ்குமார்-சாவித்திரி தம்பதியின் மூத்த மகன் ராகவன் (22), இவர் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தின் இரண்டாவது மாடியில் ஃபிட்னஸ் என்ற பெயரில் இயங்கிவரும் தனியார் உடற்பயிற்சி கூடத்தில் கடந்த 24 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நீராவி குளியலுக்காக சென்றார்.இங்கு திருச்சி நகரைச் சேர்ந்த காவல்துறை அலுவலர்கள், தொழிலதிபர்கள் என பலரும் உடற்பயிற்சி, நீராவி குளியல், மசாஜ் போன்றவற்றை செய்து வருகின்றனர். இந்த பயிற்சி கூடத்தில் ராகவனும் நீராவி குளியலுக்காக ஏற்கனவே மூன்று முறை சென்று வந்துள்ளார்.இந்த பயிற்சி கூடத்தில் நீராவிக் குளியல் அறை ஒரு கழிவறை போல் அமைக்கப்பட்டுள்ளது. நீராவி அளவு மற்றும் நேர கட்டுப்பாட்டுக்கு ஒரு பணியாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே கதவை சாத்திவிட்டு நீராவி குளியலில் ஈடுபட்டிருந்த ராகவனுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால், சுதாரித்துக்கொண்டு கதவை தட்டியுள்ளார். ஆனால் யாரும் கதவைத் திறக்கவில்லை. இதனால், ராகவன் நீராவி குளியல் அறை உள்ளேயே மயங்கி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது.ரத்தம் கொட்டிய நிலையில், நீராவி வெளியேறி கீழே விழுந்த ராகவனின் கால்களை தாக்கியதில், அவரது ஒரு கால் முற்றிலும் நீராவி வெப்பத்தால் வெந்துள்ளது. ரத்தக்கசிவு கதவு வழியாக வெளியே வந்ததைப் பார்த்த ஊழியர்கள் உடனடியாக ஓடிச்சென்று கதவை திறந்து பார்த்தனர். இதனையடுத்து மயக்க நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ராகவனை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.ஜிம்மில் நீராவி குளியலில் ஈடுபட்ட இளைஞரின் கால் வெந்துபோனதுஆனால், அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டி இருந்ததால் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு காலில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்று நாள்கள் கோமா நிலையிலும், அதைத் தொடர்ந்து 6 நாட்கள் அவசர சிகிச்சை பிரிவிலும் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இதுகுறித்து ராகவனின் பெற்றோர் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று நியாயம் கேட்டதற்கு, சிகிச்சைக்கு ஆகும் செலவை ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்துள்ளனர். ஆனால் தற்போது வரை சிகிச்சைக்கான செலவு தொகையையும் வழங்காமல் பெற்றோரையும் உடற்பயிற்சி கூட நிர்வாகம் மிரட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து தில்லைநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் உடற்பயிற்சி கூடத்தில் எவ்வித பாதுகாப்பு அம்சங்களும், வழிகாட்டி நெறிமுறைகளும் இல்லாதது தெரியவந்தது. மேலும் நீராவியில் ரசாயனம் எதுவும் கலந்ததா?, இதன் காரணமாக ராகவன் மயக்கமடைந்தாரா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர் ஆனால் ஒரு நாள் வரை உடற்பயிற்சி நிலைய உரிமையாளர் கைது செய்யப்படவில்லை? கைது செய்யாதது ஏன் என்ற காரணம் ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.அதிக வெப்பம் காரணமாக ராகவனுக்கு மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இப்படிப்பட்ட பயிற்சி நிலையங்களுக்கு முறையான அரசு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதா இவர்கள் பயிற்சி நிலையம் அமைக்க தமிழக அரசு புதிய நடைமுறை சட்டம் கொண்டு வரவேண்டும் முறையான சான்றிதழ் பெற்று உள்ளார்களா என்பதனை காவல்துறை திருச்சியில் மட்டுமன்றி தமிழகம் முழுவதும் முறையான உடற்பயிற்சி நிலையம் அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதனை தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து
தனியார் உடற்பயிற்சி கூடத்தில் நீராவி குளியலில் ஈடுபட்ட இளைஞரின் கால் வெந்துபோன பரிதாப சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...

0 comments:
Post a Comment