Saturday, April 18, 2020
On Saturday, April 18, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி
(சமூக இடைவெளி இல்லாமல் அரசு உத்தரவை மீறி புகைப்படத்தில் கிராமியப் பாடகர் ஆக்காட்டி ஆறுமுகம் புதுக்கோட்டை பட்டிமன்ற பேச்சாளர் சரவணன் இலுப்பூர் ராசப்பா டாப் 5 லீடர்கள் என்று இவர்களால் அழைக்கப்படும் இளங்கோவன் அறிவுமணி பால்ராஜ் பாபு சாகுல் மற்றும் இவர்களுடன் எல்பின் உரிமையாளர்கள் அழகர்சாமி என்கிற ராஜா அவரது சகோதரர் ரமேஷ் குமார் என்கிற எஸ்ஆர்கே ரமேஷ்)
இந்தியாவிலும் தமிழகத்திலும் மத்திய மாநில அரசுகள் தொற்று பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன எடுத்துவரும் நடவடிக்கைகளில் தனித்திருக்க வேண்டும் சமூக இடைவெளி வேண்டும் வீட்டில் இருந்து வெளியில் அவசியமில்லாமல் வரக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது
ஆனால் தொடர்ச்சியாக பொதுமக்களை ஏமாற்றி வரும் எல் பின் நிறுவனம் பல ஊர்களில் தன்னுடைய கை வரிசை களை காட்டிவிட்டு தற்போது திருச்சியில் மையமாக போலி நிறுவனத்தை நடத்தி வருகிறது பல்வேறு கவர்ச்சி திட்டங்களை அறிவித்து இவர்கள் அறிவித்ததை பூர்த்தி செய்யாமல் இருந்ததால் இவர்களுடன் ஏமாற்றத்தில் ஈடுபட்டிருந்த நபர்கள் இவர்களை விட்டு பலர் வெளியில் விலகி சென்றுள்ளனர்
இந்நிலையில் புதுக்கோட்டையிலிருந்து கிராமியப் பாடகர் ஆக்காட்டி ஆறுமுகம் என்ற நபரை புதுக்கோட்டை பட்டிமன்ற பேச்சாளர் சரவணன் இலுப்பூர் ஐ சேர்ந்த ராசப்பா இவர்களில் டாப் லீடர் களான இளங்கோவன் அறிவுமணி பால்ராஜ் பாபு சாகுல் மற்றும் பல நபர்களுடன் சமூக இடைவெளி இல்லாமல் அரசு கூறிய விதிமுறைகளை மீறி ஊரை விட்டு ஊர் வந்து ராஜா என்கிற அழகர்சாமி சகோதரர் ரமேஷ் குமார் என்கிற எஸ்ஆர்கே ரமேஷ் கையை குலுக்கி சால்வை அணிவித்தும் புகைப்படம் எடுத்து குரூப்பில் பதிவிட கின்றனர்
மேலும் இவர்கள் துபாய் சென்று வந்த போது சமூக இடைவெளி பின்பற்றாமல் ஏழை எளிய மக்களுக்கு கையுறை அணியாமல் மாஸ்க் அணியாமல் அன்னதானத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அதை நாம் செய்தியாக வெளியிட்டு இருந்தோம் நம் செய்தியின் வெளிப்பாடாக இவர்கள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு தனிமைப்படுத்தப் பட்டிருந்தனர்.
அதன் பின்னர் மேலும் சில நாட்கள் கழித்து தனது வீட்டில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் தருவதாக கூறி பொது மக்களை கூட்டம் கூட்டி உள்ளனர்
தங்களுடைய நிதி நிறுவனத்தில் வேலை செய்யும் நபர்களுடன் ஆட்கள் கூட்டமாக காணப்பட்டது அங்கு வசிக்கும் நபர்களால் சரக காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு காவல்துறையால் விரட்டப்பட்டனர் சுற்றியிருந்த நபர்கள் அனைவரும் கொரோனா அச்சத்துக்கு உள்ளாகினர்.
மேலும் இவர்களை தினமும் பல மாவட்டங்களிலிருந்து இவர்களை சந்திக்க பல நபர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர்.
அரசு பல விதிமுறைகளை விதித்து இருந்தும் இவர்கள் வழிமுறையை பின்பற்றாமல் இவர்கள் நடப்பது அரசை அவமானப்படுத்துகிறார்களா இல்லை அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் நடக்க வேண்டும் என்று அரசை எதிர்க்கிறார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது?
மேலும் இத்தகைய செயல்களினால் தொற்று உள்ள நபர் யாராவது பல ஊர்களில் இருந்து வரும்பொழுது வந்து செல்லும் பொழுது தொற்று பரவினால்
அரசுக்கு இது ஒரு பெரிய தலைவலியாக அமையக்கூடும்.
இவர்களுக்கு மட்டும் தனி சட்டமா இவர்களுக்கு யார் இந்த உரிமையை சலுகையை அளித்தனர் அரசா அரசு அதிகாரிகளா? எந்த அரசு எந்த அதிகாரிகள்? என்று தெரியவில்லை? ஒருவேளை மக்கள் அரசரா??🤔
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடந்தபோது தொற்று பரவாமல் இருக்க வீடியோ கான்பரன்சில் கூட்டம் நடத்தப்பட்டது.
அப்படி இருக்கும்போது எல் பின் சகோதரர்கள் மற்றும் அவர்களுடைய கூட்டாளிகளுக்கு எப்படி இந்த தைரியம் என்று தெரியவில்லை?
இவர்கள் செயல் தொடருமா தமிழக அரசால் இவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா பொறுத்திருந்து பார்ப்போம் ?
தொடர் மக்கள் சேவையில் ஈடுபடும் மாண்புமிகு அமைச்சர்கள் விதிமுறைகளை பின்பற்றும் படம்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி திருச்சியை சேர்ந்த மாண்புமிகு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அவர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொழுது சமூக இடைவெளிவிட்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...



0 comments:
Post a Comment