Monday, April 27, 2020

On Monday, April 27, 2020 by Tamilnewstv in    
சர்ச்சையை ஏற்படுத்திய கள்ளிக்குடி நேர்முக கொள்முதல் சந்தை

திருச்சி ஆளும் கட்சிக்கு ஆதரவளித்த எதிர்க்கட்சி சார்ந்தவர்களுக்கு தனியார் அறக்கட்டளை சார்பில் கேள்வி ? விடை கிடைக்குமா?

அதிமுக வில் முன்னாள் அமைச்சர் கு.பா. கிருஷ்ணன் கள்ளிக்குடி தலைமையில் தற்காலிகமாக சந்தை ஏற்பாடு செய்யப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு கள்ளிக்குடி சந்தையில் விமான நிலையத்திலிருந்து தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவர்களை கண்காணிக்க கள்ளிக்குடி சந்தையில் தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டிருந்தது.

 தற்போது விமான போக்குவரத்து இல்லாததால் கள்ளிக்குடி அதிமுக முன்னாள் அமைச்சர் கு.பா. கிருஷ்ணன் தலைமையில் எதிர்க்கட்சியான மதிமுக இணைந்து விவசாயிகளுக்கான நேர்முக கொள்முதல் சந்தை என அதனை பொதுமக்கள் வாங்கி செல்ல சந்தை இன்று ஆரம்பிக்கப்பட்டது.

அதனைப்பற்றி தனியார் அறக்கட்டளை சார்பாக கூறுகையில்


*தமிழக அரசின் முன்னாள் வேளாண்மைத் துறை அமைச்சர் மாண்புமிகு. கு.ப.கிருஷ்ணன் அய்யா அவர்களுக்கு வணக்கம். கொரானோவைக் காரணம் காட்டி தாங்கள் 27.04.2020 காலை 7 மணிக்கு கள்ளிக்குடி மார்க்கெட்டை சத்தமில்லாமல் துவங்குவதற்கு முன்னாள் வேளாண்மைத்துறை அமைச்சர் என்கிற முறையில் ஏற்பாடுகள் செய்ததற்கு நன்றி.*

*மழையில்லை விளைச்சலில்லை விலையில்லை. இதுதான் தமிழக விவசாயிகளின் நிலை.*




*கொரானோ நோயின் காரணமாக லாக்டவுன், ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு அரசு போடப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் விவசாயிகள் தங்களது விலை பொருளை கள்ளிக்குடி மார்க்கெட்டுக்கு கொண்டு போய் நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய முடியுமா? நுகர்வோர் போய் காய்கறிகள் வாங்கி வர போக்குவரத்து வசதி இல்லை. மீறி அவர்களுடைய வாகனத்தில் செல்வது என்றால் எவ்வளவு கூடுதலாக பெட்ரோல் செலவாகும் என்று நுகர்வோர் யாரும் அவ்வளவு தூரம் போக மாட்டார்கள். அதனால் மீண்டும் ஏதோ ஒரு வியாபாரிக்குத் தான் வியாபாரி கேட்கும் விலைக்கு விவசாயிகள் உற்பத்தி பொருளை விற்பனை செய்ய முடியும். அதனால் விவசாயிக்கு போக்குவரத்து செலவு, அலைச்சல், கூடுதல் வேலை நேரம் ஆகும். இதனால் விலை தான் கூடுமே தவிர நுகர்வோருக்கோ மற்றும் விவசாயிக்கோ எவ்வித இலாபமுமில்லை.*


*விவசாயிகளும் ஒரு மனிதர் அவருக்கும் உயிர் இருக்கிறது அவருக்கு நோய் தொற்று ஏற்படாது என்று நினைக்க வேண்டாம்.*
*எனவே விவசாயிகளிடம் அவரவர் பகுதியில் உள்ள வேளாண்மை துறை மூலமாக ஒரு நியாயமான விலையில் அரசே கொள்முதல் செய்து டாஸ்மாக் ஊழியர்களை கொண்டு ஒரே விலைக்கு நுகர்வோருக்கு விற்பனை செய்வதன் மூலம் விலைவாசியை கட்டுக்குள் வைக்கலாம்.*

*திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயப் பொருளுக்கு ஒரே மாதிரியான நியாயமான கொள்முதல் விலை விவசாயிக்கு கிடைக்கச் செய்யலாம்.*

*திருச்சி மாவட்டம் முழுவதும் ஒரே விலைக்கு நுகர்வோருக்கு விற்பனை செய்யலாம். இதனால் அவரவர் பகுதியிலேயே நுகர்வோர் வாங்கி கொள்வார்கள். விலை வித்தியாசம் இருக்காது*

*கொரானோ காரணமாக தற்போது தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளதால் குடிமகன்கள் பலர் குடியை மறந்து உள்ள சூழ்நிலையில் நிரந்தரமாக மதுவிலக்கை அமுல்படுத்தி டாஸ்மாக் ஊழியர்களைக் கொண்டு காய்கறிகள் கடையைத் திறக்கலாம்.*

*இவற்றைக் கருத்தில் கொண்டு முன்னாள் தமிழக வேளாண்மை துறை அமைச்சர் என்கிற முறையில் நமது தமிழக முதலமைச்சர் மாண்புமிகு. எடப்பாடி. கே. பழனிச்சாமி அய்யா அவர்களிடம் பரிந்துரை செய்து அமுல்படுத்த ஆவண செய்யுமாறு பணிவடன் தங்களை கேட்டுக் கொள்வது* *கே.கே.மாரிமுத்து*
*மேனேஜிங் டிரஸ்டி*
*ஷாலோம் பவுண்டேஷன்ஸ் தொண்டு நிறுவனம்.* *துறையூர், திருச்சி.*
*செல் :90805 33539 / 99940 12601.*

*எனது கருத்து தங்களுக்கு ஏற்புடையதாக இருந்தால் படித்துவிட்டு உடனே நமது தமிழக அரசின் முன்னாள் வேளாண்மை துறை அமைச்சர் மாண்புமிகு. கு.ப.கிருஷ்ணன் அவர்களின் வாட்ஸ்அப் நம்பர் 99941 45555 என்கிற நம்பருக்கு இக் கோரிக்கையை அனுப்பி வைக்கவும்.*
என தனியார் அறக்கட்டளை சார்பில் கள்ளிக்குடி நேர்முக கொள்முதல் என ஏற்பாடு செய்த ஆளுங்கட்சி எதிர்க்கட்சி ஆகியோருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது

0 comments: