Monday, April 27, 2020

On Monday, April 27, 2020 by Tamilnewstv in    
சமயபுரம் மக்களே உஷார் ..! குழம்பில் மிதக்கும் புழுக்கள் ..!

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு சேர்ப்பதற்காக ஊராடங்கில் பல தளர்வுகள் அரசு செய்து இருக்கிறது, மளிகை பொருட்கள் தரமானதாகவும், விலை அதிகமாக விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில்,
சமயபுரம் பகுதியில்  விற்கப்படும் மளிகை பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக பொதுமக்கள் கூறிவருகின்றனர் , தற்பொழுது சமயபுரம் கடைவீதியில் இயங்கிவரும் ஸ்ரீ கிருஷ்ணா மளிகைகடை மளிகைகடையில் தரமற்ற மசால் பொருட்கள் விநியோகம் செய்து வருகின்றனர்,  இன்று ஞயாற்று கிழமை என்பதால் அசைவ உணவு சமைப்பதற்காக  வங்கிவரப்பட்ட  மசால் தூள் பக்கெட்டை பயன்படுத்தி வைக்கப்பட்ட குழம்பில் புழுக்கள் மிதந்துள்ளது, அதை பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர், அதை பார்ப்பதற்கு முன்பே அந்த குழம்பை சிலர் சாப்பிட்டதாகவும் புழுக்கள் மித்தப்பதை பார்த்ததும் அதை வாந்தி எடுத்துவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர், பிறகு அந்த குழம்பை சாக்கடையில் ஊற்றி விட்டதாக கூறினர்,  உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் இல்லையென்றால் மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என அப்பகுதி பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

0 comments: