Monday, April 27, 2020
On Monday, April 27, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
முசிறி அருகே குடும்பதகராறில் கணவன், தாய் கண் முன்பு கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை - கணவன், மாமியார் கைது
மகளை காப்பாற்ற கிணற்றில் குதித்த பாச தாய்
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா டி.புதுப்பட்டியை சேர்ந்தவர் லாரி டிரைவர் சஞ்சீவிராஜ். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரக்ஷனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.
ரக்ஷனா கர்ப்பிணியாக இருந்தநிலையில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு நடைபெறுவது வழக்கம். ரக்ஷனா கணவரிடம் கோபித்துகொண்டு சுக்காம்பட்டியில் உள்ள தாய் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.
சஞ்சீவிராஜ் பைக்கில் மனைவியை அழைத்துசென்றுள்ளார். ரக்ஷனா வீட்டருகே மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பைக்கில் இருந்து கீழே இறங்கிய ரக்ஷனா அப்பகுதியில் இருந்த ஆழமான கிணற்றில் குதித்துள்ளார்.
நீச்சல் தெரியாத நிலையில் ரக்ஷனா உயிருக்கு போராடி உள்ளார். இதனை தூரத்தில் இருந்து பார்த்த ரக்ஷனாவின் தாய் தனலட்சுமி ஓடிவந்து மகளை காப்பாற்ற கிணற்றில் குதித்துள்ளார். ஆனாலும் ரக்சனா தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார். அருகிலிருந்தவர்கள்
கிணற்றில் குதித்து தனலட்சுமியை காப்பாற்றினர். முசிறி, துறையூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் ரக்சனாவின் உயிரற்ற சடலத்தை மீட்டனர். சம்பவம் குறித்து வழக்கு பதிந்த முசிறி போலீசார் இளம்பெண் இறப்புக்கு காரணமான சஞ்சீவிராஜ், இவரது தாய் பாப்பாத்தி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மகளை காப்பாற்ற ஆழமான கிணற்றில் குதித்து போராடிய தாயின் பாசம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சிஅடைய செய்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை - 3 பேர் காவல்நிலையத்தில் தலையுடன் சரணடைந்தனர். ...
-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருப்பூர் புறநகர் மாவட்டம் சார்பில் மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...

0 comments:
Post a Comment