Monday, April 27, 2020
On Monday, April 27, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
முசிறி அருகே குடும்பதகராறில் கணவன், தாய் கண் முன்பு கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை - கணவன், மாமியார் கைது
மகளை காப்பாற்ற கிணற்றில் குதித்த பாச தாய்
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா டி.புதுப்பட்டியை சேர்ந்தவர் லாரி டிரைவர் சஞ்சீவிராஜ். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரக்ஷனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.
ரக்ஷனா கர்ப்பிணியாக இருந்தநிலையில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு நடைபெறுவது வழக்கம். ரக்ஷனா கணவரிடம் கோபித்துகொண்டு சுக்காம்பட்டியில் உள்ள தாய் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.
சஞ்சீவிராஜ் பைக்கில் மனைவியை அழைத்துசென்றுள்ளார். ரக்ஷனா வீட்டருகே மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பைக்கில் இருந்து கீழே இறங்கிய ரக்ஷனா அப்பகுதியில் இருந்த ஆழமான கிணற்றில் குதித்துள்ளார்.
நீச்சல் தெரியாத நிலையில் ரக்ஷனா உயிருக்கு போராடி உள்ளார். இதனை தூரத்தில் இருந்து பார்த்த ரக்ஷனாவின் தாய் தனலட்சுமி ஓடிவந்து மகளை காப்பாற்ற கிணற்றில் குதித்துள்ளார். ஆனாலும் ரக்சனா தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார். அருகிலிருந்தவர்கள்
கிணற்றில் குதித்து தனலட்சுமியை காப்பாற்றினர். முசிறி, துறையூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் ரக்சனாவின் உயிரற்ற சடலத்தை மீட்டனர். சம்பவம் குறித்து வழக்கு பதிந்த முசிறி போலீசார் இளம்பெண் இறப்புக்கு காரணமான சஞ்சீவிராஜ், இவரது தாய் பாப்பாத்தி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மகளை காப்பாற்ற ஆழமான கிணற்றில் குதித்து போராடிய தாயின் பாசம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சிஅடைய செய்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...

0 comments:
Post a Comment