Saturday, May 16, 2020
On Saturday, May 16, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மே 16
திருச்சியில் நிருபர் வெட்டிக்கொலை - கொலையாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
திருச்சி தாரநல்லூர், பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த நடேசன் இவரது மகன் மணி (எ) மணிகண்டன் (38)
இவருக்கு
பழனியம்மாள் என்ற மனைவியும் ஷிவானி, சிவசாமி மற்றும் சிவஹரி என்ற மூன்று பிள்ளைகளை கொண்டு இவர் "போலீஸ் பார்வை" என்ற மாத இதழில் நிருபராக பணியாற்றி வந்தார். அதே பகுதியில் பால்ராஜ் என்பவர் சேவியர் அரிசி ஆலையில் நடத்தி வருகிறார். அங்கு முறைகேடாக ரேஷன் கடை அரிசியை வாங்கி அதை விற்று வருவதாக அறிந்த அவர் இது குறித்து செய்தியை எடுத்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அரிசி மில் உரிமையாளர் பால்ராஜிக்கும் மணிக்கு தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மாலை சுமார் 5.30மணி அளவில் மணி விட்டிற்க்கு வந்த காம் தூக்கும் தொழிலாளர்களான அலங்காநதபுரத்தை சேர்ந்த ஜான், அஜித்குமார் மற்றும் பாலு ஆகியோர் வீட்டிலிருந்த மணியை வாசலுக்கு இழுத்து வந்து அவரின் மனைவி பிள்ளைகள் கண் எதிரே சாமரியாக வெட்டினர்.இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே உயிர் இழந்தார்.
இது குறித்து தகவல் திருச்சி காந்தி மார்க்கெட் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ஜான், அஜித்குமார், பாலு ஆகியோரை தேடி வருகின்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...

0 comments:
Post a Comment