Friday, May 22, 2020
On Friday, May 22, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
மணப்பாறை அருகே
40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த தெருநாயை மீட்ட தீயணைப்புதுறை.
மீட்கச் சென்ற அதிகாரியிடம் பரிவுகாட்டி அமைதியாக நின்ற நாய்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த விடத்திலாம்பட்டி பகுதியில் உள்ள சுமார் 40 அடி ஆழமுள்ள ஒரு கிணற்றில் இன்று காலை அந்த வழியாக சுற்றித் திரியும் தெருநாய் ஒன்று கிணற்றில் இருந்த சுமார் 2 அடி நீரில் அங்கும் இங்குமாக சுற்றித் திரிவதை பார்த்த அந்த பகுதி மக்கள் இதுபற்றி மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கயிறு கட்டி கிணற்றில் இறங்கினர். ஆனால் நாய் கடித்து விடுமோ என்ற அச்சத்தில் தயங்கி தயங்கி தீயணைப்பு துறை அதிகாரி கிணற்றில் இறங்கவே அவரைக் கண்டதும் நாய் அமைதியாக நின்று தன்னை மீட்க உதவிய அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு நல்வகுபோல் மிகவும் பரிவு காட்டியது. இதையடுத்து அதிகாரிகள் அந்த நாயின் மீது கயிற்றை கட்டி கிணற்றில் இருந்து மீட்டு மேலே கொண்டு சென்றனர்.
அதன் பின்னர் கயிற்கை அவிழ்த்து விடும் வரை அமைதியாக நின்று கொண்டிருந்த பின்னர் கயிறு அவிழ்த்து விடப்பட்டதும் அங்கிருந்து மெதுவாக புறப்பட்டுச் சென்றது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...


0 comments:
Post a Comment