Friday, May 08, 2020
On Friday, May 08, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
தமிழ் நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் இணைப்பு சங்கத்தின் கோரிக்கைகள்
தாய்சங்கத்தின் மாநில மையத்தின் முடிவின்படி வருகின்ற 08.05.2020 வெள்ளிகிழமை அன்று அரசு பணியாளர் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள், இணைப்பு சகோதர சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் முன்னனி தோழர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து
கீழ்க்கண்ட கோரிக்கைகளுக்காக மாவட்ட தலைநகரில் ஏதாவது ஒரு அலுவலகத்தில் சமூக இடைவெளி விட்டு நின்று ஆட்சேபனையை தெரிவிப்பதுடன், அலுவலகத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்திட வேண்டும் என்றும் மேலும்
கோரிக்கைகள்
பல்வேறு ஆண்டுகளாக போரடி பெற்ற உரிமைகளான அகவிலைப்படி 3 தவணை நிறுத்தம், சரண்டர் விடுப்பூதியம் நிறுத்தம் மற்றும் பி எப் வட்டி விகிதம் குறைப்பு போன்ற அரசு பணியாளர்களின் உரிமைகளை பறிக்கும் அரசாணையை தமிழக அரசு உடனடியாக கைவிடவேண்டும்.
கொரோன நோய் தொற்று நடவடிக்கையில் பணிபுரிந்து வரும் நியாய விலை கடை பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு மற்றும் சிறப்பூதியம் வழங்க வேண்டும். மேலும் அனைத்து துறையிலும் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றும் மேல்நிலை தொட்டி காவலர்கள், தூய்மை காவலர்களுக்கு மருத்துவ காப்பீடு மற்றும் சிறப்பூதியம் வழங்க வேண்டும்.
மேலும் இவர்களுக்கு மாதாந்திர ஊதியம் நிலுவைஇன்றி வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக 44 நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட்டு இருப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, சமூக பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமல் தமிழகம் அமைதியாக திகழ்கிறது. எனவே *சமூகத்தை சீரழிக்க கூடிய மதுக்கடைகளை அரசு நிரந்தரமாக மூட வேண்டும். அங்கு பணியாற்றும் பணியாளர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப அரசு பணி, மாற்று பணி வழங்கிட வேண்டும்
தமிழ் நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் மாநில மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரு பேச்சு திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்த...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
பெருந்துறை சீனாபுரம், திங்களூர் ஊராட்சிகளில் 237 பேருக்கு 948 விலையில்லா ஆடுகளை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார். 237 பேருக்கு ...



0 comments:
Post a Comment