Wednesday, May 06, 2020
On Wednesday, May 06, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி
மாவட்ட குற்றவியல் சங்கம் சார்பில் நலிந்த வழக்கறிஞர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பை அடுத்து நீதிமன்றங்கள் மூடப்பட்ட தொடர்ந்து பணிக்குச் செல்லாமல் வழக்கறிஞர்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கறிஞர்களுக்கு உதவி செய்யும் வகையில் திருச்சி மாவட்ட குற்றவியல் சங்கத்தின் சார்பில் இன்று காலை நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி முரளிசங்கர் அரிசி, காய்கறி ஆகியவற்றை வழங்கினார். மேலும் கொரோனா தொந்த நோய் கட்டுப்படுத்தும் வகையில் கபசுர குடிநீர் சூரணம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கிருபாகரன்மதுரம், மற்றும் வழக்கறிஞர்கள் வெங்கடேஷ், கிஷேர் குமார், கோபி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு இன்று முதல் கட்டமாக 50 வழக்கறிஞர்களுக்கு கொடுக்கப்பட்டது தொடர்ந்து 200 பக்கங்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment