Wednesday, May 06, 2020
On Wednesday, May 06, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மதிமுக 27 ஆம் ஆண்டு துவக்க விழா கொடியேற்றி அன்னதானம் வழங்கப்பட்டது
திருச்சியில் இன்று மதிமுகவின் 27 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சியான கொடியேற்றுதல் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது மதிமுகவின் கொடிகள் உறையூர் மேட்டு தெரு குமரன் நகர் ஆகிய இடங்களில் கொடி ஏற்றப்பட்டது.
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயில் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி ராஜன் இலமுருகு மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் தலைமை வகித்தார். ஜெயசீலன் பகுதி கழக செயலாளர் வரவேற்புரையாற்றினார் சக்தி மகேந்திரன் மோகன் முரளி சுந்தர் ஜாஹிர் இஸ்மாயில் ஆனந்தன் எட்வர்டு தவமணி புண்ணியமூர்த்தி அசோக்குமார் ராமசுப்பு, மாரிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கொடியேற்றி அன்னதானம் மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டிசோமு துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவர் ரொஹையா பெல் ராஜமாணிக்கம் துரையரசன் எல்லகுடி அன்புராஜ் அடைக்கலம் (தலைவரின் நேர்முக உதவியாளர்) ஜார்ஜ் ராஜா மலர் செழியன் விவேக் அன்பு சேகர் பாரதி அர்ஜுன் ரெங்கராஜ் நாகேஸ்வரன் மற்றும் கழக நிர்வாகிகள் பல்வேறு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டிருந்தனர். மேலும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு அனைத்தும் உறையூர் பகுதி கழகம் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாஸ்போர்ட் வரதன் 60 வது வட்ட கழக செயலாளர் நன்றி உரை ஆற்றினார்.
பின்னர் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் மருத்துவர் ரொஹையா கூறுகையில்
நாங்கள் 27 ஆண்டுகளாக டாஸ்மாக்கை எதிர்த்து போராட்டம் நடத்தி வந்தோம்
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான் மதிமுக சார்பில் 3000 கிலோ மீட்டர் வரை நடந்து கிராமங்களுக்கு எல்லாம் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம்.
நாங்கள் வழக்கு தொடர்ந்ததால் அதன் விளைவுதான் நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளை மூடப்பட்டுள்ளது தற்போது சில நாட்களாக எல்லோரும் நன்றாக தான் இருந்தார்கள் நாளைக்கு டாஸ்மார்க் கடைகளை திறந்தால் பெரும் விளைவை சந்திக்க நேரிடும் ஊரடங்கு உத்தரவை மூடப்பட்ட மதுக் கடைகளை தொடர்ச்சியாக மூடி மதுவில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் எங்களுடைய தலைவரின் குறிக்கோள்
மதுபான கடைகளை திறந்தால் கொரோனாதொற்று அதிகமாக பரவ கூடும் என்பதுதான் உண்மை மது அருந்துவதனால் அவர்களின் மது அருந்துபவர்களின் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். எளிதாக கொரோனா தொற்று பரவ கூடும் இதனால் மருத்துவர்களுக்கு காவல்துறையினருக்கு சிரமத்தை ஏற்படுத்தக் கூடும்
இப்போது இருக்கும் வேலையை விட பத்து மடங்கு அதிகமாகும்
எங்கள் மதிமுகவின் சார்பாக டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்பது தாழ்மையான வேண்டுகோள்
தற்போது உள்ள மதுபானங்கள் விரைவில் காலாவதி ஆகப்போகிறது அதனால்தான் டாஸ்மாக் கடைகளை திறக்கிறார்கள்,
இது பெரும் பிரச்சினையை தமிழகத்திற்கு ஏற்படுத்தும் சமூக பரவல்கள் அதிகமாக கூடும் என்று மருத்துவர் ரொஹையா தெரிவித்தார்.
பேட்டி.... மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் மருத்துவர் ரொஹையா
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...

0 comments:
Post a Comment