Wednesday, May 06, 2020
On Wednesday, May 06, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
தமிழக அரசு நாளை முதல் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
அதன் படி
நமது திருச்சி மாவட்டத்தில் நகர்புறங்களில் உள்ள 71 மதுபான கடைகளும் கிராமப்புறங்களில் உள்ள 112
மதுபான கடைகளும் இதில் தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் 20
கடைகள் திறக்கப்படவில்லை.
மதுபான கடைகள் தினமும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
திறக்கப்பட்டிருக்கும். மது வாங்க வருபவர்களுக்கு காலை 8.00 மணி முதல் சமுக இடைவெளியை
பின்பற்றி டோக்கன் வழங்கப்படும். டோக்கன் வரிசைபடி ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படும். மதுபான
கடையில் வரிசையில் நின்று வாங்குவதற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது 6 அடி இடைவெளி
விட்டு வரிசையில் நிற்பதற்காக அடையாளம் இடப்பட்டுள்ளது.
மதுபானக் கடை ஊழியர்களுக்கு கிருமிநாசினி கையுறை முககவசம் ஆகியவை
வழங்கப்பட்டுள்ளது. மதுபானம் வாங்க வருபவர்கள் முககவசம் அணிந்திருக்க வேண்டும் கிருமிநாசினி
கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே மதுபானங்களை வாங்க அனுமதிக்கப்படுவர்.
சமுக
இடைவெளியை பின்பற்றி நாளை முதல் மதுபானக் கடைகள் செயல்படும். மொத்தமாக எந்தவொரு
நபருக்கும் மதுபான வகைகள் வழங்கப்படாது. தனிநபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இவ்வாறு
மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...

0 comments:
Post a Comment