Tuesday, October 05, 2021
On Tuesday, October 05, 2021 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
படித்துறை அங்காளம்மன் கோவிலில் ராகு தோஷ நிவர்த்தி பிரதிஷ்டை
திருச்சி குடமுருட்டி பாலம் அருகே அமைந்துள்ள அய்யாளம்மன் கோயிலின் அருகே காவேரி கரையில் அங்காளம்மன் கோயில் உள்ளது
இந்தக் கோயில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அமைந்துள்ள கோயில் என்பது குறிப்பிடத்தக்கது இந்த கோயிலில் அந்த ஊர் பொதுமக்கள் படித்துறை அருகே அமைந்துள்ளது படித்துறை அங்காளம்மன் என்று கூறுவது வழக்கம் அப்படி சிறப்பு வாய்ந்த கோவிலில் இன்று ராகுவின் திரு உருவம் ஆன பாம்பின் வடிவில் ஹிந்து முறைப்படி மந்திரங்கள் ஜெபிக்கப்பட்டு கல் பிரதிஷ்டை செய்யப்பட்டது
மேலும் இந்தக் கோயிலில் காவல் தெய்வங்கள் மதுரை வீரன் சங்கிலிக்கருப்பு பைரவர் விநாயகர் அம்மனின் திருவுருவங்கள் போன்ற சிறப்பம்சங்களை கொண்ட கோயிலில்
பிரதிஷ்டை செய்யப்பட்ட பாம்பின் உருவம் கொண்ட ராகு தோஷ நிவர்த்தி கல்லுக்கு படையல் போடப்பட்டு பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் பல ஊர்களில் இருந்து வந்த ஆண்கள் ,பெண்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கப்பட்டு அரசு விதிகளை பின்பற்றி கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment