Thursday, September 08, 2016
Tuesday, September 06, 2016
நைஜீரிய இஸ்லாமிய இளைஞருக்கும் காரைக்கால் பெண்ணுக்கும் இந்து முறைப்படி காரைக்காலில் திருமணம் நடைபெற்றது.
காரைக்கால் பச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகரன். இவர், காரைக்கால் பாரத ஸ்டேட் வங்கியில் துணை மேலாளராகப் பணியாற்றிவருகிறார். இவரது மகள் சத்தியபிரியா என்கிற சனாவுக்கும், நைஜீரியாவைச் சேர்ந்த அகமது பெல்லோ பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.பால்பிண்டார் இஸôக் மகன் இப்ராஹிம் இஸôக்குக்கும் காரைக்காலில் உள்ள திருமண அரங்கு ஒன்றில் இந்து முறைப்படி திங்கள்கிழமை திருமணம் நடைபெற்றது.
இதில், புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இத்திருமணம் குறித்து மணமகள் குடும்பத்தினர் கூறும்போது, சத்தியபிரியா புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. படித்தபோது, நைஜீரியாவைச் சேர்ந்த இப்ராஹிம் இஸôக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்தனர்.
இவர்களுக்கு இரு குடும்பத்தினரின் ஒப்புதலுடன் காரைக்காலில் திருமணம் நடைபெற்றது. மணமகள், காரைக்காலில் உள்ள கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். மணமகன் நைஜீரியாவில் தொழில் செய்துவருகிறார் என்றனர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...