Saturday, March 07, 2015

On Saturday, March 07, 2015 by farook press in ,    






On Saturday, March 07, 2015 by farook press in ,    
திருப்பூர் அருகே கோவில் ஊழியரை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி கட்டையால் அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுகிறதாவது:
திருப்பூர் மாவட்டம் மங்கலத்தை அடுத்த பள்ளபாளையம் சர்ச் வீதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 56). இவர் வாழைதோட்டத்து அய்யன்கோவிலில் உண்டியல் காப்பாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மகன் கதிரேசன் (29). கார் டிரைவர். கடந்த 2–ந்தேதி இரவு பள்ளபாளையம் பஸ் நிறுத்தத்தில் உள்ள ஆட்டோஸ்டேண்ட் அருகே கதிரேசன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த ஆமோஸ்சுந்தர்சிங் (27) என்பவர் கதிரேசனிடம் வாடகைக்கு ஆட்டோ வருமாறு அழைத்துள்ளார். அதற்கு அவர் நான் ஆட்டோ டிரைவர் இல்லை என்று கூறியதாக தெரிகிறது.இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கதிரேசன் அங்கிருந்து அருகில் உள்ள பேக்கரிக்கு சென்றுள்ளார். அவரை பின் தொடர்ந்து சென்ற ஆமோஸ் சுந்தர்சிங் மீண்டும் அவரிடம் தகராறில் ஈடுபட்டு கதிரேசனை தாக்கியதாக தெரிகிறது. அப்போது அங்கு சென்ற கதிரேசனின் தந்தை கணேசன் ஆமோசை சுந்தர்சிங்கை தடுத்து தட்டி கேட்டதாக தெரிகிறது. இதை தொடர்ந்து அவர் கணேசனை அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் அங்கு நடந்து சென்று கொண்டிருந்த கணேசனை அங்குள்ள வீதியில் விரட்டி சென்ற ஆமோஸ் அங்கு கிடந்த கட்டையால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்து இறந்தார். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆமோசை தாக்கியதாக தெரிகிறது. அவர்களிடம் இருந்து தப்பி சென்ற அவர் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கதிரேசன் கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆமோஸ் சுந்தர் சிங்கை கைது செய்தனர். மேலும் அவரை திருப்பூர் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். திருப்பூர் அருகே கோவில் ஊழியரை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
On Saturday, March 07, 2015 by farook press in ,    
திருப்பூர் முருகம்பாளையம் அண்ணாமலைநகர் பகுதியை சேர்ந்தவர் முத்துபெருமாள். இவரது மனைவி சந்தனமாரி (எ) குட்டி (வயது 20). இவர்களுக்கு 35 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அதே பகுதியில் முத்துபெருமாள் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இதில் அவருடைய அண்ணன், அவருடைய மனைவி மற்றும் சந்தனமாரி வேலை பார்த்து வந்ததாக தெரிகிறது. மேலும் குடும்பத்தகராறில் சந்தனமாரி மனஉளைச்சலுடன் காணப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சந்தனமாலிரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சந்தனமாரியின் அக்கா பவித்ரா கொடுத்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தற்கொலை செய்து கொண்ட சந்தனமாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருமணமான 35 நாட்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்றது
On Saturday, March 07, 2015 by farook press in ,    
உடுமலையில் மாற்றுத்திறனாளி மாணவி உள்பட 4 ஆயிரத்து 446 மாணவ, மாணவிகள் பிளஸ்–2 தேர்வு எழுதினர்.

தமிழ் நாட்டில் பிளஸ்–2 தேர்வு நேற்று தொடங்கியது. பிளஸ்–2 தேர்வுக்காக உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாக்களில் 14 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த 14 தேர்வு மையங்களிலும் சேர்த்து மொத்தம் 4 ஆயிரத்து 496 மாணவ– மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு அனுமதி சீட்டு (ஹால்டிக்கெட்) வழங்கப்பட்டிருந்தது. இதில் பள்ளிகளில் அல்லாமல் தனியாக படித்தவர்கள் தேர்வு எழுதுவதற்கு 114 மாணவ– மாணவிகளுக்கு ஆர்.கே.ஆர்.கிரிக்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. நேற்று தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. இந்த தேர்வை 14 மையங்களிலும் சேர்த்து மொத்த 4 ஆயிரத்து 446 மாணவ–மாணவிகள் எழுதினர். மொத்தம் 50 மாணவ–மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை.உடுமலை ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப்பள்ளி (எஸ்.கே.பி.பள்ளி) தேர்வு மையத்தில் மாற்றுத்திறனாளி மாணவி எஸ்.கிருஷ்ணவேணி, வேறு அரசு பள்ளி ஆசிரியரின் உதவியுடன் தேர்வில் பங்கேற்றார்.மாணவி கிருஷ்ணவேணி அதிக நேரம் தொடர்ந்து எழுத இயலாத மாற்றுத்திறனாளி என்பதால் அவர் சொல்கிற விடையை எழுதுவதற்கு அவர் படிக்கும் பள்ளி ஆசிரியரல்லாத வேறு பள்ளி ஆசிரியர் ஒருவரை பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. அதன்படி வினாவிற்கான விடையை அந்த மாணவி கிருஷ்ணவேணி சொல்ல, சொல்ல அதை எழுதுவதற்காக அமர்த்தப்பட்டிருந்த ஆசிரியர் விடைத்தாளில் எழுதினார்.
ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒரு நிலையான பறக்கும் படை அலுவலர் மற்றும் 2 பறக்கும் படை அலுவலர்கள், தேர்வறை கண்காணிப்பாளர், துறை அலுவலர், முதன்மை கண் காணிப்பாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வு மையங்களுக்கு வினா மற்றும் விடைத்தாள் ஆகியவற்றை கொண்டு செல்வதற்கும், பின்னர் தேர்வு முடிந்ததும் விடைத் தாள்களை சேகரித்து திருப்பூருக்கு கொண்டு சென்று மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முன்னிலையில் ஒப்படைக்கவும் 3 பிரிவுகளாக வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
On Saturday, March 07, 2015 by farook press in ,    
திருப்பூர் மாவட்டம், மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எரசிணம்பாளையம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் நிதி மூலம் ரூ.19½ லட்சம் மதிப்பில் ராக்கியாவலசு–புளியம்பட்டி இடையே புதிய தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. ஈரோடு எம்.பி.செல்வக்குமார சின்னையன் தலைமையில் தாராபுரம் எம்.எம்.ஏ.பொன்னுச்சாமி இதை தொடங்கி வைத்தார். இதில் அ.தி.மு.க. மூலனூர் ஒன்றிய செயலாளர் வி.பி.பெரியசாமி, அதிபர் சண்முகம், மூலனூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கலையரசி, தாராபுரம் ஒன்றியக்குழு தலைவர் ரமேஷ், மூலனூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மாணிக்கம், எரசினம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
On Saturday, March 07, 2015 by farook press in ,    
திருப்பூரில் அடகு கடை வைத்து நடத்தி ரூ.75 லட்சம் மோசடி செய்த வழக்கில் மறுஅடகு வைக்கப்பட்ட 360 பவுன் நகையை மாநகர குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக மீட்டுள்ளனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
திருப்பூர் கோல்டன் நகர் கருணாகரபுரியை சேர்ந்தவர் அப்பாஸ் மந்திரி (வயது 42). இவருடைய மனைவி பகுதா (33). இவர்கள் இருவரும் அந்த பகுதியில் நகை அடகு கடை நடத்தி வந்தனர். இங்கு சுற்றுப்பகுதிகளை சேர்ந்த 1,800 பேர் சுமார் 350 பவுனுக்கும் மேல் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றிருந்தனர்.
இந்தநிலையில் கடந்த 2013–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23–ந்தேதி அடகு கடையை பூட்டி விட்டு கணவன்–மனைவி இருவரும் திடீரென தலைமறைவாகிவிட்டனர். அப்பாஸ் மந்திரியின் கடையில் நகையை அடகு வைத்தவர்கள் இதையறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த அப்பாஸ் மந்திரி, அவருடைய மனைவி பகுதா ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வந்தனர்.
பின்னர் கடந்த 2013–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18–ந்தேதி திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசி மற்றும் போலீசார், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த பகுதாவை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு திருப்பூர் மாநகர குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீஸ் துணை கமிஷனர் சுந்தரவடிவேல் உத்தரவின் பேரில், தலைமறைவான அப்பாஸ் மந்திரியை பிடிக்க உதவி கமிஷனர் குணசேகரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இதற்கிடையே அப்பாஸ் மந்திரி ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றுவிட்டார். இதன் பின்னர் தனிப்படை போலீசார் பகுதாவை போலீஸ் காவலில் எடுத்து, விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், இவர்கள், தங்களிடம் அடகு வைத்த நகைகளை தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் மறு அடகு வைத்து சுமார் ரூ.75 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது.
பகுதா கொடுத்த தகவலின் பேரில் பல்வேறு வங்கிகள் மற்றும் தனியார் நிதிநிறுவனங்களில் மறு அடகுவைத்த 315 பவுன் நகையை தனிப்படை போலீசார் கடந்த சில மாதங்களுக்கு முன் மீட்டனர். இந்த நிலையில் நேற்று காலை பி.என்.ரோடு பிச்சம்பாளையம் புதூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், பகுதா மறு அடகு வைத்த 45 பவுன் நகையை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் மீட்டனர். இதுவரை இந்த வழக்கில் 360 பவுன் நகை மீட்கப்பட்டு உள்ளது. இந்த நகைகள் விரைவில் கோர்ட்டு மூலம் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
On Saturday, March 07, 2015 by farook press in ,    
அமராவதி வனப்பகுதியில் சந்தனக்கட்டை கடத்தல் குப்பலை சேர்ந்த 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அமராவதி வனச்சரக பகுதியில் மான், காட்டெருமை, யானை, சிறுத்தைப்புலி, கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் இந்த வனப்பகுதியில் சந்தனமரம் உள்ளிட்ட ஆபூர்வ வகை மரங்களும் அதிக அளவில் உள்ளது. எனவே வனவிலங்குகள் வேட்டையாடப்படாமல் பாதுகாக்கவும், ஆபூர்வ வகை மரங்களைப்பாதுகாக்கவும் வனத்துறையினர் தினசரி ரோந்துப்பணியில் ஈடுபட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.மேலும் வனப்பகுதியில் ஏராளமான நவீனரக கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 4–ந்தேதி நள்ளிரவில் அமராவதி வனச்சரகத்துக்கு உட்பட்ட கல்லாபுரம் வனப்பகுதியில் மர்மநபர்கள் நடமாட்டம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அந்த நபர்கள் மாவோயிஸ்டுகளா? அல்லது சந்தனக்கட்டை கடத்தல் கும்பலைச்சேர்ந்தவர்களா? என்று பல்வேறு கோணங்களில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் வனப்பகுதியில் ரோந்துப்பணியை தீவிரப்படுத்தினர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தளிஞ்சி வனப்பகுதியில் மர்ம நபர்கள் சிலர் நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து 25–க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தளிஞ்சி வனப்பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு இருந்த 4 பேரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா புலியூரைச்சேர்ந்த காளி(வயது50), கிள்ளியூரைச்சேர்ந்த திருப்பதி (29),கீழுரைச்சேர்ந்த வேந்தன் (26), அதே ஊரைச்சேர்ந்த கோவிந்தராஜ் (26)என்பது தெரியவந்தது.
மேலும் இவர்கள் பல்வேறு சந்தனக்கட்டை கடத்தலில் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது. அது மட்டுமல்லாமல் இவர்கள் கேரள மாநிலம் காந்தளூர், காரையூர் சந்தன மரக்காப்புக்காட்டுப்பகுதியிலும் சந்தன மரங்களை வெட்டிக்கடத்தும் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று வனத்துறையினர் சந்தேகமடைந்தனர். இதனைத்தொடர்ந்து பிடிபட்ட 4 பேரையும் விசாரணைக்காக கேரள மாநில வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். கண்காணிப்பு கேமராவில் சிக்கிய மர்ம நபர்கள் பிடிபட்டதைத் தொடர்ந்து அமராவதி வனச்சரக வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் ஊடுருவல் நடைபெற்றுள்ளதா? என்ற சந்தேகம் முடிவுக்கு வந்துள்ளது.
On Saturday, March 07, 2015 by farook press in ,    
ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மூலனூர் பேரூர் இளைஞரணி மற்றும் கன்னிவாடி பேரூர் தி.மு.க. சார்பில் பள்ளி மாணவ–மாணவிகளுக்கு இனிப்பு, எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.மூலனூர் பேரூர் இளைஞரணி சார்பில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வெங்கு கல்பட்டி கார்த்தி தலைமையில் அண்ணாநகர் ஆரம்ப பள்ளியில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி பள்ளி மாணவ–மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் எழுது பொருட்கள் வழங்கப்பட்டது. இதை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வெங்குகல்பட்டி கார்த்தி வழங்கி தொடங்கி வைத்தார். இதில் மூலனூர் பேரூர் செயலாளர் தெண்டபாணி, பேரூர் இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.இதில் ஒன்றிய துணைச்செயலாளர் சண்முகம், மாவட்ட பிரதிநிதி இரா.செந்தில்குமார், வார்டு செயலாளர் சங்கர், பிரதிநிதி விஸ்வநாதன் ஒன்றிய, பேரூர் இளைஞரணியினர் கலந்து கொண்டனர்.
கன்னிவாடி பேரூர் தி.மு.க. சார்பில் பேரூர் அவைத்தலைவர் சீரங்கராயன் தலைமையில் கன்னிவாடி, காதக்கோட்டை, மொங்க நல்லாம்பாளையம், மணலூர், எரச்சப்பாடி, ஒரத்துப்பாளையம் ஆகிய பகுதிகளில் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ–மாணவிகளுக்கு சர்க்கரைப்பொங்கல் வழங்கப்பட்டது. கன்னிவாடி பேரூர் செயலாளர் சுரேஷ் வழங்கி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட பிரதிநிதி வடிவேல், பெரியசாமி, பேரூர் இளைஞரணி அமைப்பாளர் கார்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பேரூர் துணை அமைப்பாளர் ராமசாமி, ஒன்றிய பிரதிநிதி கிரிகுமார், பேரூராட்சி உறுப்பினர்கள் பெரியசாமி, செல்லமுத்து, குழந்தைவேல், தமிழரசி, சின்னத்துரை, பாலசுப்பிரமணி, சிவகுருபாலன், செண்பகவேல் பூபாலன் மற்றும் பேரூர் இளைஞரணி துணை அமைப்பாளர் பொன்மதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
On Saturday, March 07, 2015 by farook press in ,    
திருப்பூர், பல்லடம், அவினாசி தாலுகா அலுவலகங்களில் உள்ள பொது இ–சேவை மையங்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவினாசி, ஊத்துக்குளி, உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம் ஆகிய 9 தாலுகா அலுவலகங்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஆகிய 10 இடங்களில் பொது இ–சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 9 தாலுகா அலுவலகங்களிலும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மூலம் இந்த சேவை மையங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 24–ந் தேதி முதல் திருப்பூர் மாவட்டத்தில் இந்த சேவை மையங்கள் வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் ஆகியவற்றை இந்த மையத்தில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். இதுதவிர சமூக நலத்துறை மூலம் வழங்கப்படும் திருமண நிதி உதவிதிட்டம் தொடர்பான அனைத்து கோரிக்கை மனுக்களும் இங்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அமைச்சர் ஆய்வு
மேலும் மின்கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளும் பொது சேவை மையம் மூலம் வழங்கப்படுகிறது. அதுபோல் மத்திய அரசின் வருமான வரித்துறையால் வழங்கப்படும் ‘பான்கார்டு’ பெறவும், ஆதார் அட்டை பெறுவதற்கு ஒப்புகை சீட்டு இருந்தால் அதை பயன்படுத்தி ஆதார் அட்டை நகல் எடுத்துக்கொள்வதற்கும் இங்கு விண்ணப்பிக்கலாம். இதுதவிர தேர்தல் ஆணையத்தின் மூலம் வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தங்கள் செய்துகொள்ளவும், பாஸ்போர்ட் பெறுவதற்கும், அதுதொடர்பான காவல்துறையின் சான்றிதழ் பெற விண்ணப்பிப்பதற்கும், ஆயுள் காப்பீட்டு கழகத்தின் (எல்.ஐ.சி.) தவணை தொகை செலுத்தவும் இந்த பொது இ–சேவை மையத்தில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்து தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று திருப்பூர் மாவட்டத்தில் ஆய்வு செய்தனர். திருப்பூர் வடக்கு, பல்லடம், அவினாசி ஆகிய தாலுகா அலுவலகங்களில் உள்ள பொது இ–சேவை மையத்துக்கு சென்று அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சான்றிதழ்களை வழங்கினார்.இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, மேயர் விசாலாட்சி, மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், எம்.எல்.ஏ.க்கள் பரமசிவம், கருப்பசாமி, துணைமேயர் குணசேகரன், மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், கிருத்திகா சோமசுந்தரம், மாவட்ட கவுன்சிலர் தண்ணீர்பந்தல் நடராஜன், அவினாசி பேரூராட்சி தலைவர் ஜெகதாம்பாள், பல்லடம் நகராட்சி துணைத்தலைவர் வைஸ் பி.கே.பழனிசாமி, பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சிவாசலம், உகாயனூர் ஊராட்சி தலைவர் யு.எஸ்.பழனிசாமி, பல்லடம் நகர அ.தி.மு.க. செயலாளர் ரத்தினசாமி, ஒன்றிய துணை செயலாளர் சித்துராஜ், தாசில்தார்கள் சிவக்குமார், ரமேஷ், அம்சவேணி, அரசு கேபிள் டி.வி. தாசில்தார் முருகதாஸ் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.