Thursday, March 12, 2015

On Thursday, March 12, 2015 by Tamilnewstv in    


வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படும் அனைத்து சான்றிதழ்களையும் பொதுமக்கள் எளிதில் பெற தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் கடந்த 24.02.2015 முதல் பொது சேவை மையங்கள் தொடங்கப்பட்டு குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அரசால் வழங்கப்படும் சான்றிதழ்கள் மற்றும் நலத்திட்டங்களைப் பெற பொதுமக்கள் பல்வேறு அலுவலகங்களுக்குச் சென்று விண்ணப்பித்து பெறப்பட்டு வந்த நிலையை மாற்றிää எவ்வித சிரமமும் ஏற்படாமல் ஒரே அலுவலகத்தில் விண்ணப்பித்து எளிதில் சான்றிதழ்களைப் பெறும் வகையில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. பொது சேவை மையங்கள் அனைத்து வட்டங்களிலும் தொடங்கப்பட்டு செயல்பட்டு வரு»றது. இதன் மூலம் பொதுமக்கள் பெறவேண்டிய சான்றிதழ்கள் மற்றும் நலத்திட்டங்கள் நேர்த்தியாகவும்ää வெளிப்படையாகவும் அவர்கள் வசிக்கும் இருப்பிடத்திற்கு அரு»லேயே அளிப்பது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 

இச்சேவை மையங்களில் தற்போது முதல் தலைமுறை பட்டதார்p சான்றிதழ்ää வருமானச் சான்றிதழ்ää சாதிச்சான்றிதழ்ää இருப்பிடச் சான்றிதழ்ää விதவைச் சான்றிதழ் ஆகிய சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.  இச்சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் போது அதற்கான கட்டணம் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.  உதாரணமாகää 1. முதல் பட்டதாரி சான்று பெறுவதற்கு குடும்ப அட்டைää பள்ளி மாற்றுச்சான்றிதழ் அல்லது கல்லூரியில் படித்து வருவதற்கான சான்றுää தாய்-தந்தைää அண்ணன்-தம்பிää அக்கா-தங்கை ஆகியோரின் பள்ளிச் சான்றிதழ்களை இணைக்கப்பட வேண்டும்.  2. இருப்பிடச் சான்று பெறுவதற்கு குடும்ப அட்டை  மற்றும் பிறப்பு சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.

மனுதாரர் சான்று கோரி விண்ணப்பிக்கும் போது அசல் ஆவணங்கள் அனைத்தும் கணினியில் ஸ்கேன் செய்யப்பட்டு அதன் பின் விண்ணப்பதாரரின் விபரங்கள் உரிய படிவத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டு மனுதாரரால் சரிபார்க்கப்பட்ட பின்பே மனுவிற்கான எண் (ஊயனெனையவந யுஉஉழரவெ ரேஅடிநச) கணினியில் பதிவு செய்யப்பட்டு மனுதாரருக்கு ஒப்புகை சீட்டு  வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த படிவத்தில் மனுதாரரின் கைப்பேசி எண் பதிவு செய்யப்படும்.  அவ்வாறு மனுதாரருக்கு கைப்பேசி எண் இல்லையெனில் அவரது உறவினர் அல்லது அவரது இருப்பிடத்திற்கு அருகில் உள்ளவரது கைப்பேசி எண் பதிவு செய்யப்படும். மனுதாரர் தான் விண்ணப்பித்த சான்றிதழை பெற்றுக்கொள்ள ஏதுவாக சான்று தயாரானதும் அவரது கைபேசியில் குறுஞ்செய்தி (ளுஆளு) அனுப்பபடும.; அந்தச் செய்தியின் அடிப்படையில் சான்றினை நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம்.

இச்சேவையைத் தொடர்ந்து சமூக நலத்துறையின் மூலம் வழங்கப்படும் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்ää மூவானூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்ää டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவித் திட்டம்ää .வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதியுதவித் திட்டம்ää டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம்ää அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவித் திட்டம் உள்ளிட்ட 38 வகையான மின்னாளுமை அரசு சேவைகள் அதற்கான கட்டணத்துடன் வழங்கப்பட உள்ளது. 

இதனைத் தொடர்ந்துää இந்த பொது சேவை மையங்கள் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை செலுத்துவதற்கான வசதியும்ää மத்திய அரசின் வருமான வரித்துறையால் வழங்கப்படும் பான் கார்டு (Pn ஊயசன) என்று அழைக்கப்படும் நிரந்தரக் கணக்கு எண் பெறுவதற்கு விண்ணப்பம் செய்வதற்கும்ää ஆதார் அட்டை பெறுவதற்கு ஒப்புகை சீட்டு இருந்தால் அதைப் பயன்படுத்தி ஆதார் அட்டையின் பிரிண்ட் எடுத்துக் கொள்வதற்கும்ää தேர்தல் ஆணையத்தின் மூலம் வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தங்கள் செய்துகொள்வதற்கும்ää பாஸ்போர்ட் பெற அது தொடர்பான காவல் துறையின் சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பம் செய்வதற்கும்ää ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (டுஐஊ) தவணைத் தொகை செலுத்துவதற்கும் இப்பொது சேவை மையங்களில் வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்பட உள்ளன.  ஸ்ரீரங்கம் பொதுசேவை மையம் மாநிலத்திலேயே ஒரு மாடல் சேவை மையமாக உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
On Thursday, March 12, 2015 by farook press in ,    
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்துள்ள பொங்கலூர் ஒன்றியம் கேத்தனூரில் ஊராட்சி மன்ற தலைவர் ஹரிகோபால் ஏற்பாட்டின் பேரில் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் 5 ஆயிரம் பேருக்கு சிறப்பு அன்ன தானம் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வும், ஒன்றிய செயலாளருமான கே.பி.பரமசிவம், பொங்கலூர் ஒன்றிய செயலாளரும், ஒன்றியக்குழு தலைவருமான எஸ்.சிவாச்சலம் ஆகியோர் தலைமை தங்கினர். பின்னர் அங்குள்ள பெருமாள் கோவிலில் அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா நீடூழி வாழவும், மீண்டும் தமிழக முதல்வராக பெறுப்பெற்கவும் வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட செயலாளரும்,வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்து,  பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி  ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் (அறுசுவை விருந்து) வழங்கினார். 
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், ஒன்றிய குழு துணை தலைவர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயச்சுந்தர்,அனந்தகிருஷ்ணன், துணை தலைவர் பொன்னுசாமி, நாச்சிபாளையம் ஊராட்சி தலைவர் அப்புசாமி, திருப்பூர் நிலவள வங்கி தலைவர் புத்தரச்சல் பாபு, துத்தேரிபாளையம் கூட்டுறவு சங்க தலைவர் நாகராஜன்,ஒன்றிய மகளிர் அணி செயலாளர் ஜோதிமணி, கிளை நிர்வாகிகள் மகேஷ்குமார், சந்தோஷ், ரங்கராஜ் உள்ளிட்டவர்களும், கேத்தனூர் ஊராட்சி அண்ணா தி.மு.க.சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி மன்ற, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



Wednesday, March 11, 2015

On Wednesday, March 11, 2015 by farook press in ,    
திருப்பூர் பல்லடம் சாலை ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் எம்.எல்.ஏ., மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் உள்பட மாநில நிர்வாகிகள், மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.
சிறப்புப் பேரவை
இந்த மாநிலக்குழுக் கூட்டத்தையொட்டி திருப்பூரில் சிஐடியு சிறப்புப் பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்திலேயே மாலை 5 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் எம்.எல்.ஏ., மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், ஆர்.சிங்காரவேலு உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர். இதில் வெண்மணி தியாகிகள் நினைவு இல்லத்திற்கு இரும்பு சேகரிப்பு நிதி வழங்கப்படுகிறது.
​ இக்கூட்டத்தில் பெருந்திரளான தொழிலாளர்கள் பங்கேற்கும்படி சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன் கேட்டுக் கொண்டார்.
On Wednesday, March 11, 2015 by farook press in ,    
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரை, கவிதை போட்டிகள் நடத்தப்படுகின்றன.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாடு மார்ச் 19ம் தேதி முதல் 22ம் தேதி முடிய நான்கு நாட்கள் திருப்பூரில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டை முன்னிட்டு வரும் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் (புதிய கட்டிடம்) கல்லூரி மாணவ, மாணவியருக்கான கட்டுரை, கவிதை போட்டிகள் நடைபெறுகின்றன. 
கட்டுரை போட்டிக்கு கல்வி - அறிவைத் தூண்டுவதா? மதிப்பெண்ணைத் தாண்டுவதா? அல்லது கல்வெட்டு முதல் கணினி வரை.. தமிழே காண்! அல்லது எந்நாட்டிலும் இல்லாத சாதி, இங்கு மட்டும் ஏன்? என்ற மூன்று தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் நான்கு பக்க அளவில் கட்டுரை எழுதலாம்.
கவிதை போட்டியில் சாதி மதங்களைப் பாரோம்! அல்லது மெல்லத் தமிழ் இனி வளரும்! அல்லது தீண்டாமைக்குத் தீயிடுவோம்! என்ற மூன்று தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் இரண்டு பக்க அளவில் கவிதைகள் எழுதலாம்.
இந்த போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு தேவையான தாள்கள் இங்கேயே தரப்படும். வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.3 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.2 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.ஆயிரம் மற்றும் பதக்கம், புத்தகம் பரிசாக வழங்கப்படும்.
இப்போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு மார்ச் 22ம் தேதி திருப்பூர் டவுன்ஹாலில் நடைபெறும் தமுஎகச மாநில மாநாட்டு கலை இரவு நிகழ்ச்சியில் பரிசளிப்பு விழா நடைபெறும்.
இந்த போட்டிகள் குறித்து மேலும் விபரங்களுக்கு: 94434 70780, 97860 73353, 90039 46766, 99445 54204, 99428 87500, 94861 08729, 90434 64007, 94421 64354 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தமுஎகச மாநில மாநாட்டு வரவேற்புக்குழு தெரிவித்துள்ளது.
On Wednesday, March 11, 2015 by farook press in ,    









On Wednesday, March 11, 2015 by Tamilnewstv in    


பொன்மலை ரயில்வே காலணியில் நீண்ட காலமாக சாலை மோசமடைந்த காரணத்தால் தற்சமயம் தார் சாலை போடும் பணி நடைபெறுகிறது. இந்நிலையில் பொதுமக்களும் தொழிலாளர்களும் பெரிதும் பயன்படுத்தும் சாலையான் ஆர்மெரிகேட் (டிஓ)சு10சையப்பர் ஆலயம் செல்லும் சாலை மற்றும் ஹோலிகிராஸ் காண்வெண்ட் மடத்திற்கு செல்லும் சாலையை திட்டமிட்டே புறக்கணித்துவிட்டனர் ஆகவே டைபி மற்றும் கிறிஸ்துவ மக்கள் கட்சி சார்பாக சாலையை உடனே போட கோரி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்
On Wednesday, March 11, 2015 by Tamilnewstv in    

தோழமை போற்றுதும் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சித் துறையினர் பங்கேற்கும் ஓர் இனிய சந்திப்பு பூமாலை வணிக வளாகம் பாரதிதாசன் சாலையில் நடைபெற்றது.
பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி  துறையில் பணியாற்றிய அனைத்து நண்பர்களும் பங்கேற்றனர்

Tuesday, March 10, 2015

On Tuesday, March 10, 2015 by farook press in ,    
உடுமலைபேட்டையில் சனியன்று இரவு நடத்தப்பட்ட கலை இரவு நிகழ்ச்சியில் புகுந்து ரகளையில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினர் மீது காவல் துறை உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) வலியுறுத்தியுள்ளது.
தமுஎகச திருப்பூர் மாவட்டக்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் ஆர்.குமார் தலைமையில் கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் செவ்வாயன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் எஸ்.ஏ.பெருமாள், மாவட்டச் செயலாளர் ஆர்.ஈஸ்வரன் உள்பட மாவட்ட நிர்வாகிகள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதில் திருப்பூரில் மார்ச் 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறவுள்ள தமுஎகசவின் 13வது மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது குறித்தும், மாநாட்டு ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. முன்னதாக முதுபெரும் சுதந்திரப் போராட்ட வீரர், பத்திரிகையாளர் ஐ.மாயாண்டி பாரதி, திரைப்பட இயக்குநர் ஆர்.சி.சக்தி ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க உடுமலைபேட்டை கிளை சார்பில் சனியன்று குட்டை மைதானத்தில் மாபெரும் கலை இரவு நிகழ்ச்சி நடைபெற்றது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, கையில் காவிக் கொடிகளை ஏந்திக் கொண்டு, குடிபோதையில் 10 பேர் கொண்ட கும்பல் புகுந்து ரகளையில் ஈடுபட்டுள்ளது. மோடி, ராமர், கோட்சே குறித்து பேசக் கூடாது என்று மிரட்டல் விடுத்து, இருக்கைகளை தூக்கி வீசியுள்ளனர். கலை இரவில் பங்கேற்ற மக்கள் இவர்களது அராஜகத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தவுடன் தப்பியோடிய கும்பல் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்திருக்கிறது.
காவல் துறையிடம் முறைப்படி அனுமதி பெற்று நடத்தப்பட்ட கலை இரவு நிகழ்ச்சியில் ரகளையில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று காவல் துறையிடம் தமுஎகச உள்ளிட்ட கலை இரவில் பங்கேற்றோர் வற்புறுத்தியுள்ளனர். ஆனால் உடுமலை காவல் துறையினர் குற்றவாளிகளைக் கைது செய்யாமல், கலை இரவு நிகழச்சியை முடித்துக் கொள்ள கட்டாயப்படுத்தியுள்ளனர். 300க்கும் மேற்பட்டோரின் முற்றுகை போராட்டத்துக்குப் பிறகு கலை இரவு நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த காவல் துறை அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் கருத்து சுதந்திரத்துக்கு எதிராக, தொடர்ச்சியாக எழுத்தாளர்கள் பெருமாள் முருகன், புலியூர் முருகேசன், புதுகை துரை குணா ஆகியோர் மீது வலதுசாரி மதவெறி, சாதிவெறி சக்திகள் தாக்குதல், மிரட்டல் விடுத்துவரும் பின்னணியில் உடுமலையில் திட்டமிட்டே மதவெறியர்கள் இந்த சீர்குலைவு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்பது உறுதியாகிறது. எனவே இந்த சம்பவத்திற்கு தமுஎசக கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. 
அதேசமயம் அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்கு எதிரான மதவெறி சக்திகளின் சீர்குலைவு நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய காவல் துறை, மதவெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தவிர்ப்பதுடன், பாதிக்கப்படுவோர் மீதே நடவடிக்கை எடுக்க முயல்வது கண்டிக்கத்தக்கது. தனது அணுகுமுறையை மாற்றிக் கொண்டு ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க குற்றவாளிகள் மீது உறுதியான நடவடிக்க எடுக்க வேண்டும் என்று தமுஎகச திருப்பூர் மாவட்டக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது.