Thursday, March 12, 2015
On Thursday, March 12, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
வருவாய்த்துறையின்
மூலம் வழங்கப்படும்
அனைத்து சான்றிதழ்களையும்
பொதுமக்கள் எளிதில்
பெற தமிழ்நாடு
அரசு கேபிள்
டி.வி.
நிறுவனத்தின் சார்பில்
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்
உள்ள அனைத்து
வட்டாட்சியர் அலுவலகங்களில்
கடந்த 24.02.2015 முதல்
பொது சேவை
மையங்கள் தொடங்கப்பட்டு
குறைந்த கட்டணத்தில்
பொதுமக்களுக்கு பல்வேறு
சேவைகள் அளிக்கப்பட்டு
வருகின்றன.
அரசால்
வழங்கப்படும் சான்றிதழ்கள்
மற்றும் நலத்திட்டங்களைப்
பெற பொதுமக்கள்
பல்வேறு அலுவலகங்களுக்குச்
சென்று விண்ணப்பித்து
பெறப்பட்டு வந்த
நிலையை மாற்றிää
எவ்வித சிரமமும்
ஏற்படாமல் ஒரே
அலுவலகத்தில் விண்ணப்பித்து
எளிதில் சான்றிதழ்களைப்
பெறும் வகையில்
தமிழ்நாடு அரசு
கேபிள் டி.வி.
பொது சேவை
மையங்கள் அனைத்து
வட்டங்களிலும் தொடங்கப்பட்டு
செயல்பட்டு வரு»றது.
இதன் மூலம்
பொதுமக்கள் பெறவேண்டிய
சான்றிதழ்கள் மற்றும்
நலத்திட்டங்கள் நேர்த்தியாகவும்ää
வெளிப்படையாகவும் அவர்கள்
வசிக்கும் இருப்பிடத்திற்கு
அரு»லேயே
அளிப்பது இத்திட்டத்தின்
முக்கிய நோக்கமாகும்.
இச்சேவை
மையங்களில் தற்போது
முதல் தலைமுறை
பட்டதார்p சான்றிதழ்ää
வருமானச் சான்றிதழ்ää
சாதிச்சான்றிதழ்ää
இருப்பிடச் சான்றிதழ்ää
விதவைச் சான்றிதழ்
ஆகிய சான்றிதழ்கள்
வழங்கப்பட்டு வருகின்றன. இச்சான்றிதழுக்கு
விண்ணப்பிக்கும் போது
அதற்கான கட்டணம்
மற்றும் அதற்குரிய
ஆவணங்களுடன் விண்ணப்பிக்க
வேண்டும். உதாரணமாகää
1. முதல் பட்டதாரி
சான்று பெறுவதற்கு
குடும்ப அட்டைää
பள்ளி மாற்றுச்சான்றிதழ்
அல்லது கல்லூரியில்
படித்து வருவதற்கான
சான்றுää தாய்-தந்தைää
அண்ணன்-தம்பிää
அக்கா-தங்கை
ஆகியோரின் பள்ளிச்
சான்றிதழ்களை இணைக்கப்பட
வேண்டும். 2. இருப்பிடச்
சான்று பெறுவதற்கு
குடும்ப அட்டை மற்றும்
பிறப்பு சான்றிதழ்
இணைக்கப்பட வேண்டும்.
மனுதாரர்
சான்று கோரி
விண்ணப்பிக்கும் போது
அசல் ஆவணங்கள்
அனைத்தும் கணினியில்
ஸ்கேன் செய்யப்பட்டு
அதன் பின்
விண்ணப்பதாரரின் விபரங்கள்
உரிய படிவத்தில்
முறையாக பதிவு
செய்யப்பட்டு மனுதாரரால்
சரிபார்க்கப்பட்ட பின்பே
மனுவிற்கான எண்
(ஊயனெனையவந யுஉஉழரவெ
ரேஅடிநச) கணினியில்
பதிவு செய்யப்பட்டு
மனுதாரருக்கு ஒப்புகை
சீட்டு வழங்கப்படுகிறது.
குறிப்பாக இந்த
படிவத்தில் மனுதாரரின்
கைப்பேசி எண்
பதிவு செய்யப்படும். அவ்வாறு
மனுதாரருக்கு கைப்பேசி
எண் இல்லையெனில்
அவரது உறவினர்
அல்லது அவரது
இருப்பிடத்திற்கு அருகில்
உள்ளவரது கைப்பேசி
எண் பதிவு
செய்யப்படும். மனுதாரர்
தான் விண்ணப்பித்த
சான்றிதழை பெற்றுக்கொள்ள
ஏதுவாக சான்று
தயாரானதும் அவரது
கைபேசியில் குறுஞ்செய்தி
(ளுஆளு) அனுப்பபடும.;
அந்தச் செய்தியின்
அடிப்படையில் சான்றினை
நேரில் வந்து
பெற்றுக்கொள்ளலாம்.
இச்சேவையைத்
தொடர்ந்து சமூக
நலத்துறையின் மூலம்
வழங்கப்படும் முதலமைச்சரின்
பெண் குழந்தை
பாதுகாப்புத் திட்டம்ää
மூவானூர் இராமாமிர்தம்
அம்மையார் நினைவு
திருமண நிதியுதவித்
திட்டம்ää டாக்டர்
முத்துலெட்சுமி ரெட்டி
நினைவு கலப்பு
திருமண நிதியுதவித்
திட்டம்ää ஈ.வெ.ரா.
மணியம்மையார் நினைவு
ஏழை விதவையர்
மகள் திருமண
நிதியுதவித் திட்டம்ää
டாக்டர் தர்மாம்பாள்
அம்மையார் நினைவு
விதவை மறுமண
நிதியுதவித் திட்டம்ää
அன்னை தெரசா
நினைவு ஆதரவற்ற
பெண்கள் திருமண
நிதியுதவித் திட்டம்
உள்ளிட்ட 38 வகையான
மின்னாளுமை அரசு
சேவைகள் அதற்கான
கட்டணத்துடன் வழங்கப்பட
உள்ளது.
இதனைத்
தொடர்ந்துää இந்த
பொது சேவை
மையங்கள் மூலம்
தமிழ்நாடு மின்சார
வாரியத்திற்கு செலுத்த
வேண்டிய மின்
கட்டணத்தை செலுத்துவதற்கான
வசதியும்ää மத்திய
அரசின் வருமான
வரித்துறையால் வழங்கப்படும்
பான் கார்டு
(Pயn ஊயசன)
என்று அழைக்கப்படும்
நிரந்தரக் கணக்கு
எண் பெறுவதற்கு
விண்ணப்பம் செய்வதற்கும்ää
ஆதார் அட்டை
பெறுவதற்கு ஒப்புகை
சீட்டு இருந்தால்
அதைப் பயன்படுத்தி
ஆதார் அட்டையின்
பிரிண்ட் எடுத்துக்
கொள்வதற்கும்ää
தேர்தல் ஆணையத்தின்
மூலம் வழங்கப்படும்
வாக்காளர் அடையாள
அட்டையில் திருத்தங்கள்
செய்துகொள்வதற்கும்ää
பாஸ்போர்ட் பெற
அது தொடர்பான
காவல் துறையின்
சான்றிதழ் பெறுவதற்கு
விண்ணப்பம் செய்வதற்கும்ää
ஆயுள் காப்பீட்டுக்
கழகத்தின் (டுஐஊ)
தவணைத் தொகை
செலுத்துவதற்கும் இப்பொது
சேவை மையங்களில்
வசதிகள் விரைவில்
ஏற்படுத்தப்பட உள்ளன. ஸ்ரீரங்கம்
பொதுசேவை மையம்
மாநிலத்திலேயே ஒரு
மாடல் சேவை
மையமாக உருவாக்க
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்துள்ள பொங்கலூர் ஒன்றியம் கேத்தனூரில் ஊராட்சி மன்ற தலைவர் ஹரிகோபால் ஏற்பாட்டின் பேரில் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் 5 ஆயிரம் பேருக்கு சிறப்பு அன்ன தானம் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தொகுதி எம்.எல்.ஏ., வும், ஒன்றிய செயலாளருமான கே.பி.பரமசிவம், பொங்கலூர் ஒன்றிய செயலாளரும், ஒன்றியக்குழு தலைவருமான எஸ்.சிவாச்சலம் ஆகியோர் தலைமை தங்கினர். பின்னர் அங்குள்ள பெருமாள் கோவிலில் அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலி தா நீடூழி வாழவும், மீண்டும் தமிழக முதல்வராக பெறுப்பெற்கவும் வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் மா நகர் மாவட்ட செயலாளரும்,வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் (அறுசுவை விருந்து) வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், ஒன்றிய குழு துணை தலைவர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயச்சுந்தர்,அனந்தகிருஷ்ணன், துணை தலைவர் பொன்னுசாமி, நாச்சிபாளையம் ஊராட்சி தலைவர் அப்புசாமி, திருப்பூர் நிலவள வங்கி தலைவர் புத்தரச்சல் பாபு, துத்தேரிபாளையம் கூட்டு றவு சங்க தலைவர் நாகராஜன்,ஒன்றிய மகளிர் அணி செயலாளர் ஜோதிமணி, கிளை நிர்வாகிகள் மகேஷ்குமார், சந்தோஷ், ரங்கராஜ் உள்ளிட்டவர்களும், கேத்தனூர் ஊராட்சி அண்ணா தி.மு.க.சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி மன்ற, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Wednesday, March 11, 2015
திருப்பூர் பல்லடம் சாலை ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் எம்.எல்.ஏ., மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் உள்பட மாநில நிர்வாகிகள், மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.
சிறப்புப் பேரவை
இந்த மாநிலக்குழுக் கூட்டத்தையொட்டி திருப்பூரில் சிஐடியு சிறப்புப் பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்திலேயே மாலை 5 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் எம்.எல்.ஏ., மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், ஆர்.சிங்காரவேலு உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர். இதில் வெண்மணி தியாகிகள் நினைவு இல்லத்திற்கு இரும்பு சேகரிப்பு நிதி வழங்கப்படுகிறது.
இக்கூட்டத்தில் பெருந்திரளான தொழிலாளர்கள் பங்கேற்கும்படி சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன் கேட்டுக் கொண்டார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரை, கவிதை போட்டிகள் நடத்தப்படுகின்றன.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாடு மார்ச் 19ம் தேதி முதல் 22ம் தேதி முடிய நான்கு நாட்கள் திருப்பூரில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டை முன்னிட்டு வரும் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் (புதிய கட்டிடம்) கல்லூரி மாணவ, மாணவியருக்கான கட்டுரை, கவிதை போட்டிகள் நடைபெறுகின்றன.
கட்டுரை போட்டிக்கு கல்வி - அறிவைத் தூண்டுவதா? மதிப்பெண்ணைத் தாண்டுவதா? அல்லது கல்வெட்டு முதல் கணினி வரை.. தமிழே காண்! அல்லது எந்நாட்டிலும் இல்லாத சாதி, இங்கு மட்டும் ஏன்? என்ற மூன்று தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் நான்கு பக்க அளவில் கட்டுரை எழுதலாம்.
கவிதை போட்டியில் சாதி மதங்களைப் பாரோம்! அல்லது மெல்லத் தமிழ் இனி வளரும்! அல்லது தீண்டாமைக்குத் தீயிடுவோம்! என்ற மூன்று தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் இரண்டு பக்க அளவில் கவிதைகள் எழுதலாம்.
இந்த போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு தேவையான தாள்கள் இங்கேயே தரப்படும். வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.3 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.2 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.ஆயிரம் மற்றும் பதக்கம், புத்தகம் பரிசாக வழங்கப்படும்.
இப்போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு மார்ச் 22ம் தேதி திருப்பூர் டவுன்ஹாலில் நடைபெறும் தமுஎகச மாநில மாநாட்டு கலை இரவு நிகழ்ச்சியில் பரிசளிப்பு விழா நடைபெறும்.
இந்த போட்டிகள் குறித்து மேலும் விபரங்களுக்கு: 94434 70780, 97860 73353, 90039 46766, 99445 54204, 99428 87500, 94861 08729, 90434 64007, 94421 64354 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தமுஎகச மாநில மாநாட்டு வரவேற்புக்குழு தெரிவித்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...

