Tuesday, March 17, 2015
On Tuesday, March 17, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம் 16.03.2015 முதல் வருகின்ற 22.03.2015 வரை ஒரு வார காலம் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்கள் பருகும் நீரின் தன்மையை உணரவும்ää தரமற்ற குடிநீரினால் பரவக்கூடிய நோய்கள் பற்றி தெரிந்து கொள்வதற்காகவே இவ்வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதில்ää முதல் நாள் அன்று மாவட்ட அளவில் விழிப்புணர்வு பேரணிகளும்ää 2ம் நாள் ஒன்றிய அளவில் பேரணிகளும்ää 3ம் நாள் ஊராட்சிää நகராட்சிää பேரூராட்சி அளவில் விழிப்புணர்வு கூட்டங்களும்ää 4ää 5ää 6 மற்றும் 7ம் நாட்களில் நீர் மாதிரி சேகரிப்பு பரிசோதனையும் நடத்தப்படுகிறது.
இன்று நடைபெற்ற பேரணியில் விளையாட்டு விடுதி மாணவää மாணவிகள்ää மகளிர் சுயஉதவிக்குழுவினர்ää ஜமால் முகமதுää செயின்ட் ஜோசப்ää உருமு தனலெட்சுமி கல்லூரிää இந்திராகாந்தி கல்லூரி ஆகியவற்றில் பயிலும் 600க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர். இப்பேரணி ரயில்வே சந்திப்பில் தொடங்கி கோ-ஆப்டெக்ஸ்ää மத்திய பேருந்து நிலையம் வழியாக வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளியை சென்றடைந்தது.
இப்பேரணியில் நகரப் பொறியாளர் சந்திரன்ää குடிநீர் வடிகால்வாரிய கண்காணிப்புப் பொறியாளர் என்.சந்திரசேகரன்ää நிர்வாகப் பொறியாளர் குமார்ää மாநகராட்சி செயற்பொறியாளர் பாலகுருநாதன்ää செயற்பொறியாளர் நாகே~; உட்பட பலர் கலந்து கொண்டனர்.
On Tuesday, March 17, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சிராப்பள்ளி
ஜங்சன் மேம்பாலம்
கட்டுமானப் பணிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர்
பழனிசாமி அவர்கள்
பார்வையிட்டு ஆய்வு
திருச்சிராப்பள்ளி
மாவட்டம்ää ஜங்சன்
மேம்பாலம் கட்டுமானப்
பணிகளை மாவட்ட
ஆட்சித்தலைவர் பழனிசாமிääஇன்று
பார்வையிட்டு ஆய்வு
செய்தார்.
திருச்சிராப்பள்ளி
ரயில்வே சந்திப்பு
அருகில் தமிழ்நாடு
சிறப்பு காவல்படை
முதலாம் அணி
முகாம் சாலையில்
உள்ள பழமையான
மற்றும் குறுகலான
ரயில்வே பாலத்திற்குப்
பதிலாக திருச்சிராப்பள்ளி
சந்திப்பு மற்றும்
பூங்குடி ரயில்
நிலையங்களுக்கு இடையில்
6 வழி தட
அகலமுள்ள சாலை
மேம்பாலமும்ää ரூ.81.40
கோடி மதிப்பில்
இரண்டு கட்டங்களாக
அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்
முதல்கட்டமாக ரூ.
52.52 கோடி மதிப்பில் சாலை
மேம்பாலம் ரயில்வே
பாதைக்கு மேல்
தற்போதுள்ள குறுகிய
மேம்பாலத்திற்கு அருகில்
சென்னை - திண்டுக்கல்
சாலைää திருச்சிராப்பள்ளி-மதுரை
சாலை மற்றும்
மத்திய பேருந்து
நிலையத்தை இணைக்கும்
வகையில் மூன்று
வழித்தட அகலத்துடன்
அரிஸ்டோ ரவுண்டானா
உள்ள இடத்தில்
உயர்மட்ட சுற்றுப்பாலமாக
இரண்டு அடுக்கு
போக்குவரத்து வசதியுடன்
கட்டப்பட்டு வருகிறது.
இப்பணிகளை வருகின்ற
பிப்ரவரி 2017க்குள்
முடிக்க இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும்
திண்டுக்கல்- அரிஸ்டோ
–
மத்திய பேருந்து
நிலையம் மற்றும்
திண்டுக்கல் - அரிஸ்டோ
–
திருச்சி ரயில்வே
சந்திப்பு ஆகியவற்றை
இணைக்கும் பாலப்பகுதியினை
ஓராண்டு காலத்திற்குள்
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு
கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
முதல்கட்டப்பணிகள்
முடிவடைந்தவுடன் போக்குவரத்தினை
முதல்கட்ட புதிய
பாலத்தில் அனுமதித்து
பின்னர் தற்போதுள்ள
பழைய பாலத்தினை
அகற்றி அந்த
இடத்தில் இரண்டாம்
கட்டமாக 3 வழித்தட
சாலை மேம்பாலம்
கட்டப்பட உள்ளது.
இப்பாலக்
கட்டுமானப் பணிகளை
பார்வையிட்ட மாவட்ட
ஆட்சித்தலைவர் பாலப்பணிகளுக்கு
இடையூறாக உள்ள
மின்கம்பங்கள்ää
குடிநீர் குழாய்கள்
மற்றும் பாதாள
சாக்கடை இணைப்புகளை
உடனடியாக மாற்றி
அமைத்து பால
கட்டுமானப்பணிகளை விரைந்து
முடிக்க சம்மந்தப்பட்ட
துறை தலைமை
அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும்ää சேவை
சாலைகள் அமைத்திட
நில ஆர்ஜிதம்
செய்வதற்கு விரைந்து
நடவடிக்கை எடுக்கப்படும்
என்றும்ää ரயில்வே
குடியிருப்புகள்ää
மண்டல பயிற்சிபள்ளிää
மனமகிழ் மன்றம்ää
ரயில்வே கூட்டுறவு
பண்டகசாலை உள்ளிட்ட
ரயில்வே இடங்களிலும்ää தொலைதொடர்பு
துறை இடம்ää ராணுவ
இடம் ஆகியவற்றில்
சேவைச்சாலை அமைத்திடவும்
சம்மந்தப்பட்ட துறை
அலுவலர்களுடன் விரைவில்
ஆலோசனைக் கூட்டம்
நடத்தப்படும் என்றார்.
மேலும்ää
மன்னார்புரம் சாலை
மற்றும் கிராப்பட்டி
சாலை ஆகிய
இடங்களில் பால
வேலைகளைத் தொடங்க
சிறப்புக் காவல்
படை நிலத்தில்
நான்குவழிச் சாலையினை
அமைத்து பின்னர்
பாலப்பணியினை தொடங்க
தமிழக உள்துறை
செயலாளர் மற்றும்
தமிழ்நாடு காவல்துறை
இயக்குநர் ஆகியோர்
தடையின்மைச் சான்றினை
வழங்கி உள்ளார்கள்.
இவ்விடத்தினை பார்வையிட்ட
மாவட்ட ஆட்சித்தலைவர்
சாலைப் பணிகளை
மேற்கொள்ள வருகின்ற
இரண்டு நாட்களுக்குள்
உள்நுழைவு அனுமதி
வழங்கப்படும் எனத்
தெரிவித்தார்.
இந்த
ஆய்வின் போது
மாவட்ட வருவாய்
அலுவலர் தர்ப்பகராஜ்ää
மாநகராட்சி ஆணையர்
விஜயலெட்சுமிää
நகரப்பொறியாளர் சந்திரன்ää
நெடுஞ்சாலைத்துறை உதவி
கோட்டப்பொறியாளர் பூங்கொடிää
உதவிப்பொறியாளர்கள் முத்துகுமார்ää
.நர்மதாää கோட்டாட்சியர்
கணேசசேகரன்ää மின்சாரவாரிய
செயற்பொறியாளர் ராஜேந்திர
விஜய்ää உதவி
செயற்பொறியாளர் ஏ.டி.சேகர்ää
உதவிப்பொறியாளர் சதீஸ்குமார்ää
மாநகராட்சி செயற்பொறியாளர்
பாலகுருநாதன்ää
செயற்பொறியாளர் நாகேஸ்
வட்டாட்சியர் ரவிச்சந்திரன்
உட்பட பலர்
உடனிருந்தனர்.
மதுரையில் லேசான மழை பெய்ததில் பல இடங்களில் சாலைகள் மேடு பள்ளமாக மாறியுள்ளன.
சனிக்கிழமை இரவு திடீரென மழை பெய்ததில் மதுரையில் பல
இடங்களிலும் சாலைகளில் நீர் தேங்கி நின்றது. தண்ணீர் வெளியேற வழி இல்லாத
சாலைகளில் வாகனங்கள் சென்றதால் மேலும் அரிக்கப்பட்டு பள்ளமாக மாறின.
மேலும் கொசுகள் உற்பத்தியாகும் இடமாகவும் அந்த இடங்கள் மாறியுள்ளன.
மதுரையில் போக்குவரத்து நெரிசல் மிக்க ஜெய்ஹிந்துபுரம், பெரியார்
பேருந்துநிலையம், சிம்மக்கல் போன்ற பகுதிகளில் சாலைகள் பெரும்பாலும்
மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. பாதாள சாக்கடைக்காக குழிகள் தோண்டப்பட்டுள்ள
மணிநகரம் பகுதியில் சாலைகள் போர்களம் போல் சிதிலமாகி காணப்படுகின்றன.
மதுரை பிரதான
சாலைகளில் தண்ணீர் தேங்கி பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சேறும்
சகதியுமான சாலைகளால் பள்ளிக் குழந்தைகள் பெரும் பாதிப்புக்கு
உள்ளாகியுள்ளனர். மருத்துவமனைக்கு செல்பவர்களும் அவதிப்பட்டனர். கொசுக்கள்
உற்பத்தியாவதால் உடனடியாக சாலைகளை செப்பனிட வேண்டும் என அப்பகுதி மக்கள்
தெரிவித்தனர். மதுரையைப் பொறுத்தவரை மழைநீர் வடிந்து செல்வதற்கான பாதைகளை
சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என
எதிர்பார்க்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திரபிதாரி உத்தரவின் பேரில் சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) பஞ்சாட் சரம் ஆலோசனையின் பேரில் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர்கள் சங்கர், முருகானந்தம், குற்றவியல் சப்–இன்ஸ்பெக்டர்கள் முத்துகுமார், வெங்கடேஷ், ஏட்டுகள் முத்துபாண்டி, விஜய், மணிக்குமார், ராஜ்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை செய்தனர்.
இதில் கார் டிரைவர் கருப்பையா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை முறைப்படி விசாரித்ததில், கொள்ளை சம்பவத்தில் உறவினர்களுடன் இணைந்து ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.
இதன்பேரில் அவரது மனைவி தமிழ்ச்செல்வி, மைத்துனர் கருப்பையா, நண்பர் செல்வராஜ், திருச்சியில் உள்ள மருமகன் பொன்னையா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் ரூ.23½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கொள்ளையில் ஈடுபட்டது குறித்து டிரைவர் கருப்பையா வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:–
திண்டுக்கல் மேட்டுப்பட்டி வேளாங்கன்னி கோவில் தெருவில் குடியிருந்து வருகிறேன். நான் பைனான்ஸ் பிசினசும், வாடகை கார் ஓட்டிக்கொண்டும் பிழைப்பு நடத்தி வந்தேன். இந்நிலையில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன் திண்டுக்கலில் பீடி–சிகரெட் மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன்.
அதன்பின் வாரந்தோறும் அந்த நிறுவனத்தின் மேலாளருடன் மதுரை, திண்டுக்கல், நத்தம் பகுதிகளில் சரக்குகளுக்கு பணம் வசூல் செய்ய கார் ஓட்டி சென்ற போது ‘திடீர்’ என்று பண ஆசை உண்டானது.
சொந்தமாக கார் மற்றும் வீடு வாங்க வேண்டும் அதற்கு வசூல் செய்யும் பணத்தை கொள்ளையடிக்க வேண்டும் என்று எண்ணம் உருவானது.
அதன்படி கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 1.30 மணிக்கு மதுரையிலிருந்து திண்டுக்கல் வரும் வழியில் வாடிப்பட்டி அருகே ரெயில்வே மேம்பாலம் உள்ளது. அங்கு இருட்டான பகுதி என்பதால் வாகனங்கள் வேகமாக சென்றபடி இருக்கும் அந்த இடத்தில் நான் கார் பஞ்சரானதாக கூறி காரை நிறுத்தி வைக்கிறேன்.
அப்போது மைத்துனர் கருப்பையாவும், நண்பர் செல்வராஜூம் அங்கு வந்து என்மீதும், மேலாளர் முத்துகிருஷ்ணன் மீதும் மிளகாய் பொடியை தூவி விட்டு வசூல் பணத்தை எடுத்து சென்று விடவேண்டும் என்று திட்டமிட்டோம். திட்டப்படி அவர்களும் வந்து அந்த பணத்தை எடுத்து சென்றனர். அவர்கள் அங்கு வரும்போது மிளகாய் பொடியை தூவி விட்டு பாலத்தின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு திண்டுக்கலுக்கு சென்றனர். ஆனால் போலீசாரின் சந்தேகம் என்மீது அதிகமானதால் நடந்த உண்மை ஒப்புக் கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்
Monday, March 16, 2015
திருப்பூர் குமரானந்தபுரம் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தெற்கு மற்றும் கிழக்கு கிளைகள் சார்பில் பொது மக்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, ஞாயிற்றுக்கிழமை நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
தெற்கு கிளை சார்பில் குமரானந்தபுரம் கிளை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஈ.லெனின் தலைமை ஏற்றார். மார்க்சிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர் கே.கணேசன் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ச.நந்தகோபால், வடக்கு மாநகரச் செயலாளர் எம்.ஜீவானந்தம், மாநகர துணைச் செயலாளர் சே.கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர். இப்பகுதியில் 800 பேருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...


