Saturday, May 29, 2021

On Saturday, May 29, 2021 by Tamilnewstv   

 திருச்சி மேலசிந்தாமணி பகுதியில் கோட்டை வாய்க்கால் தூர்வாரும் பணியை எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆய்வு செய்தார்.


திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் மேலசிந்தாமணி பகுதியில் கோட்டை வாய்க்கால் உள்ளது. கழிவுநீர், குப்பை, ஆகாயத்தாமரை ஆகியவற்றால் இந்த வாய்க்காலில் நீரோட்டம் பாதித்துள்ளது.

இதனால் கழிவுநீர் குட்டை போல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வந்தது. மேலும் எதிர்வரும் மழை காலத்தில் இந்த பகுதியிலிருந்து மழை நீர் வடிவதற்கு மிகவும் இடையூறாக இருக்கும். மழை காலம் வருவதற்குள் திருச்சி மாநகரில் உள்ள வாய்க்கால்களை தூர்வாரும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோட்டை வாய்க்காலை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மாநகராட்சி மூலம் இந்த வாய்க்காலை தூர்வார வலியுறுத்தினார்.

தற்போது கோட்டை வாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று காலை எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் தூர்வாரும் பணியை ஆய்வு மேற்கொண்டார். வாய்க்கால் முழுவதையும் ஆழமாக தூர்வார மாநகராட்சி அலுவலர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.


 திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்..

சமூக வலைத்தளத்தில் இனிகோ இருதயராஜ் நிர்வாகிகளை அழைப்பது இல்லை எனவும் நிர்வாகிகள் உடன் சேர்ந்து ஆய்வுக்கு செல்வதில்லை எனவும் இதனால் திமுக நிர்வாகிகள் இனிகோ இருதயராஜ் மீது அதிருப்தியில் உள்ளதாக பொய்யான செய்தி பரப்பியுள்ளனர்.

திருச்சியில் இனிகோ இருதயராஜ் திமுக தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் அப்பாற்பட்டு செயல்படுவதாக சமூகவலைதளங்களில் பரப்பப்படுகிற செய்தி  முற்றிலும் பொய்யானது.

'அனைவரும் பாருங்கள்' அனைத்து திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் என்னுடன்தான் இருக்கிறார்கள். ஆய்வுக்கு செல்லும் அனைத்து இடங்களிலும் நிர்வாகிகள் என்னுடன் பயணிக்கிறார்கள் எனக் எனக் கூறினார்.

இந்த ஆய்வின் போது திமுக பகுதி செயலாளர்கள் மதிவாணன், மண்டி சேகர்  உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் இருந்தனர்.

Friday, May 28, 2021

On Friday, May 28, 2021 by Tamilnewstv   

 திருச்சி ஸ்ரீரங்கம் 

தமிழக அரசு உத்திரவுப்படி, காய்கறி விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது

கொரோனா தொற்று வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாவதை தொடர்ந்து சென்ற வாரத்திலிருந்து முழு ஊரடங்கு தளர்வுகள் இன்றி செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்து அதன்படி அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தங்கு தடையின்றி கிடைத்திட தமிழக அரசு விரிவான ஏற்பாடு செய்து இன்று ஸ்ரீரங்கம் இராஜகோபுரம் அருகில் தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை, கூட்டுறவு பண்டகசாலை, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் தள்ளுவண்டி வியாபாரிகள் பெரும் திரலாக கலந்து கொண்ட நிலையில் விற்பனையை தொடங்கி வைக்க,
திமுக முதன்மை செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு, 


ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம் பழனியாண்டி
திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு அந்தந்த பகுதிகளில் பொதுமக்களுக்கு வீடுகள் தொரும் 2900 நடமாடும் காய்கறிக் கடை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அருகில் அனைத்துதத்துறை அதிகாரிகள், ஸ்ரீரங்கம் பகுதிச் செயலாளர் ராம்குமார் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.


பேட்டி ...அமைச்சர் கே என் நேரு

Sunday, April 04, 2021

On Sunday, April 04, 2021 by Tamilnewstv   

 திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பீரங்கி சுப்பிரமணியம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.


இன்று துறையூர் குட்டகரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவர் திறந்த ஜீப்பில் நின்றவாறு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், நான் 10 ஆண்டுகளாக காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சார்பில் பொது வார்டு மற்றும் எஸ்சி வார்டுகளில் போட்டியிட்டு கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டேன். மக்களுக்கு கவுன்சிலராக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். சட்டமன்ற தேர்தலில் நான் வெற்றி பெற்றால் துறையூரை தனி மாவட்டமாக மாற்ற முயற்சி செய்வேன்.

அரசு கலைக்கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி கூடம், தொழிற்பேட்டை ஆகியவை துறையூர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் துறையூர் பகுதியில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் முசிறியில் இருந்து காவிரி கூட்டு குடிநீர் திட்டம் துறையூருக்கு செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது அதிமுக சார்பில் போட்டியிடும் இந்திராகாந்தி ஏற்கனவே ஐந்து ஆண்டுகள்  சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். அதேபோல் திமுக சார்பில் போட்டியிடும் ஸ்டாலின் குமாரும் ஐந்து ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். இவர்கள்  இரண்டாவது முறையாக மீண்டும் வந்து வாய்ப்பு வழங்கும்படி கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது துறையூருக்கு என்ன செய்தார்கள்? என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். ஆகையால் முதன்முறை போட்டியிடும் புதியவரான எனக்கு குக்கர் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் துறையூரை வளர்ச்சி நிறைந்த மாவட்டமாக மாற்றி காட்டுவேன். நான் கவுன்சிலராக இருந்த போதே மக்களுக்காக போராடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். அதேபோல் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால் கண்டிப்பாக போராடி திட்டங்களை கொண்டு வருவேன். துறையூர் அருகே உள்ள பச்சமலைக்கு இரு வழிப் பாதை அமைக்க நடவடிக்கை எடுப்பேன். துறையூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள சின்னேரியை தூர் வாரி படகு சவாரி விடுவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைச் செயலாளர் ரவி, நகர அவைத் தலைவர் அன்பழகன், ஒன்றிய செயலாளர் மோகன்தாஸ், மாவட்ட அவைத்தலைவர் துரைராஜ், அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவர் சின்னவர், நிர்வாகிகள் சந்தோஷ், குகன், எம்ஜிஆர் மன்ற தலைவர் பழனிராஜன், மாவட்ட பிரதிநிதி குட்டி, கூட்டணிக் கட்சியான தேமுதிக நகர செயலாளர் சதீஷ், செல்லதுரை, மற்றும் ஏராளமான நிர்வாகிகள் உடன் சென்றனர்.

On Sunday, April 04, 2021 by Tamilnewstv   

 திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் யுவராஜன் போட்டியிடுகிறார். இவர் கிராமம் கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 

இந்த வகையில் இன்று துறையூர் நகரப்பகுதிகளில் திறந்த ஜீப்பில் நின்றவாறு வாக்கு சேகரித்தார். அவருடன் மக்கள் நீதி மய்ய துறையூர் ஒன்றிய செயலாளர்கள் அருள்செல்வன், ஸ்ரீபதி, துறையூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் சுரேஷ், வார்டு செயலாளர் மகேந்திரன், உறுப்பினர்கள் கோபிநாத், ஆனந்த் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் உடன் சென்றனர். அப்போது யுவராஜன் கூறுகையில், துறையூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள சின்னேரி நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதை சரி செய்து கொடுக்க வேண்டும் என்று பல தேர்தல்களில் வேட்பாளரிடம் மக்கள் கோரிக்கை வைத்தனர். 


அதாவது வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இதுவரை ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்கவில்லை. மக்கள் நீதி மய்யம் இந்த தேர்தலில் வெற்றி பெற்றவுடன் முதல் பணியாக இந்த ஏரி  தூர்வாரப்படும்.

பின்னர் அதில் தேங்கியிருக்கும் கழிவுநீரை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கடந்த 40 ஆண்டுகளாக வைரி செட்டிபாளையத்தில் உள்ள ஜம்மேரி தூர்வாரப்படாமல் உள்ளது. துறையூரில் உள்ள ஏரிகளுக்கு இது தாய் ஏரியாகும். நான் வெற்றி பெற்றால் இந்த ஏரியையும் சுத்தம் செய்து நீர் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் துறையூர் பகுதியில் 8 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. சுத்தமான குடிநீர் வினியோகம் நடைபெறவில்லை. இவற்றையும் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மருவத்தூர் பகுதியில் குடிநீர் குழாய் கழிவு நீர் கால்வாய் அருகே அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அசுத்த நீரை மக்கள் பயன்படுத்த வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பெரும்பாலான பகுதிகளில் சாலை வசதி, தெருவிளக்கு வசதி இல்லை. பல கிராமங்கள் 60, 70 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையிலேயே தற்போதும் உள்ளன. அவற்றை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

Tuesday, March 23, 2021

On Tuesday, March 23, 2021 by Tamilnewstv   

 திருவெறும்பூர் தொகுதியில் நடைபெறும் அனைத்து  ஜல்லிக்கட்டு போட்டிகளின்  செலவு தொகை அனைத்தையும் கழக ஆட்சி அமைந்தவுடன்  திருவெறும்பூர் தொகுதி சட்ட மன்ற வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்பதாக வாக்குறுதி அளித்தார் . 



தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி அமைந்தவுடன், திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெறும் அனைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு  உண்டான அனைத்து  செலவையும் நானே ஏற்று கொள்வேன் எனறும் திராவிட முன்னேற்ற கழக தலைமையில் அமைந்துள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்  திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி  வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி அளித்துள்ளார் 


மேலும் அவர் உரையாற்றும்போது நமது கழக தேர்தல்  அறிக்கையில் ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பவர்களுக்கு மாதம் தோறும் ரூபாய் 1000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்பதை எடுத்துரைத்து திருவெறும்பூர் தொகுதியில் வசிக்கும்  ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கும் இலவச காப்பீடு திட்டம் செய்து தருவேன், என்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து  ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கும் கழக அரசு அமைந்தவுடன் ஊக்க தொகை வழங்க வலியுறுத்துவேன் . என தெரிவித்தார் .

On Tuesday, March 23, 2021 by Tamilnewstv   

 திருச்சி மண்ணச்சநல்லூர் பகுதியை திணற வைத்த திமுக வேட்பாளர் கதிரவன்


திமுக சார்பில் மண்ணசநல்லூர் சட்டமன்ற தொகுதியை தனலட்சுமி குழுமத்தின் கதிரவன் என்பவர் அதிமுக பரஞ்சோதியை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிடுகிறார்.


 அவருக்கு மதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் டிடிசி சேரன் தலைமையில் ஏராளமான மதிமுகவினர் கலந்துகொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் பிரச்சாரத்தின்போது திமுக கொடியேற்றி திமுகவினர் உடன் தோழமைக் கட்சியான மதிமுக தொண்டரணி படையுடன் வாக்கு சேகரிப்பில் மதிமுகவினர் ஈடுபட்டுள்ளனர்

On Tuesday, March 23, 2021 by Tamilnewstv   

திமுக கழக மகளிரணிச் செயலாளரும் திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி அவர்கள், 


திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, பொன்மலைப்பட்டி பகுதியில்,  திருவெறும்பூர் தெற்கு ஒன்றியத்தில் உள்ள குண்டூர் ஊராட்சியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும்  திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆதரித்து

பிரச்சாரம் மேற்கொண்டார் . இந்த நிகழ்வில், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என். சேகரன், வண்ணை அரங்கநாதன், பகுதி கழக செயலாளர் இ.எம்.தர்மராஜ், ஒன்றிய கழக செயலாளர் குண்டூர் மாரியப்பன்   கூட்டணி கட்சி தலைவர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர் .

Friday, March 19, 2021

On Friday, March 19, 2021 by Tamilnewstv   

 திருச்சி ஸ்ரீரங்கம் ஐஜேகே வேட்பாளர் பிரான்சிஸ் மேரி வேட்புமனு தாக்கல் செய்தார்.


தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

 கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி தனி அணியாக போட்டியிடுகிறது.

மக்கள் நீதி மய்யம் தலைமையில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி ஐஜேகே கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் ஐஜேகே கட்சி சார்பில் பிரான்சிஸ் மேரி என்பவர் போட்டியிடுகிறார்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி நாகமங்கலத்தை சேர்ந்த பிரான்சிஸ் மேரியின் கணவர் செல்வராஜ்.

இன்று பிரான்சிஸ் மேரி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் பிரான்சிஸ் மேரி வேட்புமனுவை தாக்கல் செய்தபோது ஐஜேகே மற்றும் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பிரான்சிஸ் மேரி கூட்டணிக் கட்சியினருடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

On Friday, March 19, 2021 by Tamilnewstv   

 திருச்சி


கழக அமைப்புச் செயலாளரும், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளருமான சாருபாலா தொண்டைமான் தொகுதிக்குட்பட்ட, சோமரசம்பேட்டை முஹம்மதியா பள்ளிவாசலில் தொழுகையை நிறைவுசெய்து வெளியே வந்த இஸ்லாமிய பெருமக்களிடம் பிரசுரங்களை வழங்கி, குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

ஸ்ரீரங்கம் அமமுக வேட்பாளர் திருமதி சாருபாலாR.தொண்டைமான்  சமூகநீதி பேரவை தலைவர்  உயர்திரு.அ.ரவிக்குமார்  அவர்களை மரியாதையை நிமித்தமாக  சந்தித்தார் 
உடன் மணிகண்டம் ஒன்றிய கழக செயலாளர் S.பாக்யராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்