Saturday, March 28, 2020
On Saturday, March 28, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மார்ச் 28
திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண்
திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த பெண் பேராசிரியரை மலைக்கோட்டை பகுதி அதிமுக பொருளாளராக இருந்த வணக்கம் சோமு என்பவர் ஒரு தலை காதல் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காலை 8மணியளவில் ஆண்டார் வீதி பகுதியில் பேரரசிரியர் பணிக்கு சென்ற போது காரில் கடத்தினார். போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் அவரை பாதி வழியில் போலீசாரால் மீட்கப்பட்டார். ஆனால் வணக்கம் சோமு தலைமறைவானார். இந்த சம்பவம் தொடர்பாக கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வணக்கம் சோமுவை தேடி வந்தனர். இந்நிலையில் 7மாத தலைமறைவுக்கு பின் இன்று அவர் கோட்டை காவல் நிலையத்தில் சரண்டைந்தார். கொரோனா பீதி காரணமாக சிறைகளில் உள்ள தண்டனைக் கைதிகளை தவிர மற்ற விசாரணை கைதிகள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். தற்போது சரண் அடைந்தால் சிறை செல்ல வேண்டியது இருக்காது என்பதால் வணக்கம் சோமு திடீர் என கோட்டை காவல் நிலையத்தில் சரண்டைந்ததாக தெரிகிறது.
திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண்
திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த பெண் பேராசிரியரை மலைக்கோட்டை பகுதி அதிமுக பொருளாளராக இருந்த வணக்கம் சோமு என்பவர் ஒரு தலை காதல் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காலை 8மணியளவில் ஆண்டார் வீதி பகுதியில் பேரரசிரியர் பணிக்கு சென்ற போது காரில் கடத்தினார். போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் அவரை பாதி வழியில் போலீசாரால் மீட்கப்பட்டார். ஆனால் வணக்கம் சோமு தலைமறைவானார். இந்த சம்பவம் தொடர்பாக கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வணக்கம் சோமுவை தேடி வந்தனர். இந்நிலையில் 7மாத தலைமறைவுக்கு பின் இன்று அவர் கோட்டை காவல் நிலையத்தில் சரண்டைந்தார். கொரோனா பீதி காரணமாக சிறைகளில் உள்ள தண்டனைக் கைதிகளை தவிர மற்ற விசாரணை கைதிகள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். தற்போது சரண் அடைந்தால் சிறை செல்ல வேண்டியது இருக்காது என்பதால் வணக்கம் சோமு திடீர் என கோட்டை காவல் நிலையத்தில் சரண்டைந்ததாக தெரிகிறது.
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment