Saturday, March 28, 2020
On Saturday, March 28, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மார்ச் 28
திருச்சியில் உழவர் சந்தைகள், காந்தி சந்தை மாற்றம்.
கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உழவர் சந்தைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. மக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்ப்பதற்காக இத்தகைய முடிவு அறிவிக்கப்பட்டது. இதன் விளைவாக அனைத்து தரப்பு மக்களும் திருச்சி காந்தி சந்தையில் காய்கறி வாங்குவதற்காக குவிந்தனர். இதனால் மக்கள் கூட்டத்தில் காந்தி சந்தை நிரம்பி வழிந்தது.
இதைத் தொடர்ந்து காந்தி சந்தையில் மொத்த வியாபாரம் மட்டுமே நடைபெறும். கடைக்காரர்கள் மட்டுமே அந்த காய்கறி செல்லவேண்டும் வாங்கி செல்ல வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனாலும் மக்கள் கூட்டம் குறையவில்லை.
இதனால் வேறு வழியின்றி உழவர் சந்தைகளை மாற்று இடத்தில் திறக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது .
இந்த வகையில் திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தையை மத்திய பேருந்து நிலையத்திற்கு மாற்றி ஆட்சியர் சிவராசு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து இன்று காலை 6 மணி முதல் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உழவர்சந்தை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 25 கடைகள் முதல் கட்டமாக திறக்கப்பட்டுள்ளது. இங்கு விவசாயிகள், வியாபாரிகள் தங்களது காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று காய்கறிகளை வாங்கும் வகையில் அதற்கென்று கட்டங்கள் வரையப்பட்டுள்ளது. அதில் வரிசையாக மக்கள் நின்று காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். இந்த சந்தை தினமும் காலை 6 மணி முதல் மதியம் 2 30 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர திருச்சி காந்தி சந்தை வரும் 30ம் தேதி முதல் பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் உழவர் சந்தைகள், காந்தி சந்தை மாற்றம்.
கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உழவர் சந்தைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. மக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்ப்பதற்காக இத்தகைய முடிவு அறிவிக்கப்பட்டது. இதன் விளைவாக அனைத்து தரப்பு மக்களும் திருச்சி காந்தி சந்தையில் காய்கறி வாங்குவதற்காக குவிந்தனர். இதனால் மக்கள் கூட்டத்தில் காந்தி சந்தை நிரம்பி வழிந்தது.
இதைத் தொடர்ந்து காந்தி சந்தையில் மொத்த வியாபாரம் மட்டுமே நடைபெறும். கடைக்காரர்கள் மட்டுமே அந்த காய்கறி செல்லவேண்டும் வாங்கி செல்ல வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனாலும் மக்கள் கூட்டம் குறையவில்லை.
இதனால் வேறு வழியின்றி உழவர் சந்தைகளை மாற்று இடத்தில் திறக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது .
இந்த வகையில் திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தையை மத்திய பேருந்து நிலையத்திற்கு மாற்றி ஆட்சியர் சிவராசு உத்தரவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment