Saturday, March 07, 2020

On Saturday, March 07, 2020 by Tamilnewstv in    
தென்னிந்திய அளவிலான மாடலிங் போட்டி கடந்த பிப்ரவரி 29 ஆம் தேதி முதல் 10 நாட்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது.

இதில் தென்னிந்திய அளவில் இருந்து சுமார் 100 பேர் கலந்துகொண்டனர். இதில் திருச்சி திருவெறும்பூர் கக்கன் காலனியைச் சேர்ந்த அஜ்மீர் கான் (22) என்ற பொறியியல் பட்டதாரி கலந்து கொண்டார். மொத்தம் ஆறு சுற்றுகளாக போட்டி நடைபெற்றது. இதில் அதிக புள்ளிகளைப் பெற்று அஜ்மீர் கான் வெற்றி பெற்றார்.
திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று தனது வெற்றி குறித்து அஜ்மீர் கான் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நான் இந்த வெற்றியை சாதாரணமாக பெறவில்லை. மிகவும் கடின உழைப்புக்குப் பின்னர் வெற்றி பெற்றேன். எனது தந்தை ஒரு மீன் வியாபாரி. அவர் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். மிஸ்டர் இந்தியா பட்டம் வெல்வதே எனது இலக்காகும். உலக அளவில் இப்போட்டியில் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன். இதற்கு முன்பு மிஸ்டர் மதராசபட்டினம் போட்டியில் கலந்து கொண்டு சிறந்த இயற்கை  அலங்காரத்திற்கான பரிசைப் பெற்றேன். அதேபோல் தமிழக ஸ்டைல் ஐகான் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளேன். எனது வெற்றிக்கு ஃபேஷன் கோரியோகிராபர் பிரகாஷ் பிள்ளை மிகவும் பெரிய அளவில் உறுதுணையாக இருந்தார் என்றார்.

0 comments: