Saturday, March 07, 2020

On Saturday, March 07, 2020 by Tamilnewstv in    
திருச்சி மன்னார்புரம் தலைமை அலுவலகம் அமைத்து பொது மக்களை ஏமாற்றி வரும் நிறுவனம்தான் எல்ஃபின். 


இந்த நிறுவனத்தை பற்றி முழு விவரம் தெரிந்த புதுக்கோட்டை சத்தியமூர்த்தி அனுப்பியுள்ள வீடியோவில், 

 தஞ்சை போலீசார் திறம்பட செயல்பட்டு பிரசன்னா வெங்கடேஷ்  மற்றும் கிங்ஸ்லி ஆகிய இருவரையும் கைது செய்தனர். 

ஆனால் தற்போது பிரசன்ன வெங்கடேஷ் மற்றும் கிங்ஸ்லி   வழக்கில் இருந்து தப்பித்த சத்யபிரியா என்பவரும் துபாயில் உள்ளார்கள் உலக அளவில் காட்மண்டு  காவல்துறைக்கு அடுத்து தமிழக காவல்துறை இடம்பெற்றுள்ளது. பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற தைரியத்தில் எல்பின் அதிபர் அழகர்சாமி ( எ )ராஜா, Srk (எ) ரமேஷ் குமார் தஞ்சாவூர் போலீசாரின் தீவிர நடவடிக்கையால் 

தங்களது நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளனர். எங்களுக்கு தெரிந்த வரைக்கும் 



இவர்கள் தங்களது  தொழிலை ஒரு லட்சம் தந்தா 3 லட்சம் என்றும் 3 லட்சம் தந்தால் 9 லட்சம் என்றும் விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். திறம்பட செயல்பட்டு வரும் தமிழக காவல்துறையை  கீழ்த்தரமாகவும் , இழிவாகவும் எல்பின் நிறுவனர் ராஜா எப்படி இவ்வளவு தைரியமாக பேசுகிறார் என்று தெரியவில்லை. 


தற்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில்  தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இதனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கும் டுவிட்டர் மூலம் இவர்கள் உண்மையாக திறம்பட செயல்படும் காவல்துறைக்கு எதிராக பேசிய ஆடியோ அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  .


  •  சமீபத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் வெளியிட்ட அறிக்கையில் ஒரு தனிநபர் ஒன்றை வாங்கி மூன்றாக தருவதாக கூறுவது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என கூறியுள்ளார். இந்த எல்பின் நிறுவனத்தினர் அரசின் சட்டத்தை மதிக்காமல் ஒன்றுக்கு மூன்றாக தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து பல கோடி ரூபாய் சம்பாதித்து அந்தப் பணத்தில் துபாய் உல்லாசப் பயணம் என கூறி மக்களை அழைத்துச் சென்று மூளை சலவை செய்து வருகின்றனர். டாப் பைவ் லீடர்ஸ் , பாபு, சாகுல், இளங்கோ, பால்ராஜ், அறிவுமணி தற்போது 6 வதாக இலுப்பூர் ஐ சேர்ந்த ராஜப்பா அனைவருக்கும் சிறப்பு கவனிப்பு தற்போது துபாயில். இது இல்லாமல் 800 லீடர்களுக்கு ஸ்பெஷல் கிப்ட் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இந்த பணங்கள் இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்டதா ? அல்லது வேறு வெளிநாடுகளில் இருந்து துபாய் வந்ததா ? என தெரியவில்லை.


திறம்பட செயல்பட்டு கொண்டிருக்கும் தமிழக காவல்துறையினர்  எல்பின் சகோதரர்கள் இந்தியா வந்தவுடன் இவர்கள் மீதான பழைய வழக்குகளை தூசிதட்டி பொது மக்களின் வாழ்வாதாரத்தில் விளையாடும் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என மிக மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என புதுகை சத்தியமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் மோசடி வழக்கில் உள்ள சத்திய பிரியா 

வெளிநாட்டில் தொடர்ச்சியாக தங்கி வருவதாகவும் தன்னை காவல்துறை கைது செய்யாமல் இருக்க எல்பின் சகோதரர்கள் பேரம் பேசி வருவதாகவும் அவர்களுடைய வட்டாரத்தில் தெரிவித்துள்ளார் 

உண்மைத்தன்மையை காவல்துறை அதிகாரிகள் தான் விசாரணை செய்ய வேண்டும் தொடர்ச்சியாக எல் பின் சகோதரர்கள் காவல்துறைக்கு எதிராக ஆடியோ போன்ற ஆதாரங்கள் வெளியிட்டும் சமீபத்தில் தஞ்சை காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட பிரசன்ன வெங்கடேஷ் மற்றும் கிங்ஸ்லி அவர்கள் துபாய் எப்படி அழைத்து சென்றார்கள் என்பது ஒரு கேள்விக்குறியாக உள்ளது

எல் பின் சகோதரர்கள் திருச்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் திருச்சி அல்லது சென்னை போன்ற இடங்களில் கோடிக்கணக்கான செலவில் எல்பின் நிறுவனத்தின் இன்வெஸ்ட்மெண்ட் சந்திப்பு பெரிய அளவில் ஏற்பாடு செய்யப் போவதாக கூறியுள்ளனர்  


(மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு RMWC  ஓரியண்ட் ஹைபர் மார்க்கெட் பார்ட்னர்கள் பாதுஷா மற்றும் இரண்டு நபர்கள் டின் நம்பர் 0002927268 அடுத்தது  வராக மணி பார்ட்னர்கள் ரமேஷ்குமார் விஸ்வநாதன் செட்டியார் டின்  நம்பர் 0003161010 & 0006833411 இதுநாள்வரை  பல கோடிகள் சுருட்டியது போதவில்லை என்று அடுத்தது தற்போது 2017 எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார்  & பாதுஷா    டின் நம்பர் 0003161010 & 0002927268 அடுத்தது 2019 ஸ்பேரோ  குளோபல் டிரேடிங் பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு பார்ட்னர்கள்  ஜிஎஸ்டி பின் நம்பர் 33ADSFS9169BIZN
 என்ற நிறுவனம்   )

தமிழகம் முழுவதும் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தஞ்சையில் தற்போது காவல்துறையால் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் திருச்சியில் மட்டும் தொடர்ச்சியாக கூட்டம் நடத்துவது எப்படி சென்னை நட்சத்திர ஓட்டல்களில் எதனடிப்படையில் கூட்டம் நடத்தப்படுகிறது என்பது பொதுமக்களிடையே ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது அதற்கு தீர்வு காவல்துறை தான் பதில் அளிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து

0 comments: