Sunday, March 08, 2020

On Sunday, March 08, 2020 by Tamilnewstv in    
திருச்சி

திருச்சி வேர்கள் அறக்கட்டளை மற்றும் துரைசாமிபுரம்
புனித அந்தோணியார் இளையோர் இயக்கம்  சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது .

 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு  திருச்சி வேர்கள் அறக்கட்டளை துரைசாமிபுரம்
புனித அந்தோணியார் இளையோர் இயக்கம், திருச்சி சில்வர்லைன் சிறப்பு மருத்துவமனை, Dr. அகர்வால்'ஸ் கண் மருத்துவமனை, ஹாசினி ஸ்கின் கேர் ஹாஸ்பிட்டல் மற்றும் உயிர்த்துளி இரத்தவங்கி ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் துரைசாமிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியினை திருச்சி தெற்கு மாவட்ட  பொறுப்பாளரும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.

 இந்த இலவச சிறப்பு மருத்துவ முகாமில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன்பெற்றனர்.

இம்முகாமில்  கண் மருத்துவர், தோல் அழகியல் மருத்துவர் உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று இலவச ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கினர்.

மேலும் இம்முகாமில் அறக்கட்டளையை சார்ந்த இளைஞர்கள் ஆர்வமுடன் இரத்ததானம்  செய்தனர்..

0 comments: