Saturday, March 07, 2020
On Saturday, March 07, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி தேசியக் கல்லூரியில் நடந்த ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று திருச்சி வந்தார்.
திருச்சி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி எப்போது தொடங்கும் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு சுப்பிரமணியன் சுவாமி பதில் கூறுகையில், ஏப்ரல் 2ஆம் தேதி ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டப் படும். அனைத்து கட்டுமான பொருட்கள் தயாராக இருப்பதால், உடனடியாக அவற்றை கோர்க்கும் பணி தொடங்கும். இரண்டு ஆண்டுகளில் கோவிலை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல் காசி விசுவநாதர் கோவில் பகுதியில் ஒரு பகுதி உடைக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டுள்ளது. அதையும் மாற்றுவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்காக சன்னியாசிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு நான் தலைவராக இருக்கிறேன். பாபர் மசூதியை நான் இடிக்கவில்லை. மக்களாக இணைந்து இடித்தார்கள். அது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது என்றார். திமுக தேர்தல் வியூலத்திற்கு பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு, சுப்பிரமணியசாமி பதில் கூறுகையில், பிரசாந்த் கிஷோர் யார் என்பது எனக்கு தெரியாது. ஒரு அரசியல் தலைவராக இருந்தால் எனக்கு தெரியும். ஆனால் இந்த தேர்தலில் திமுக தோற்க வேண்டும். அதற்கான முயற்சிகளை அனைவரும் இணைந்து மேற்கொள்வோம்
என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், சசிகலா சிறையில் இருந்து வந்தவுடன் மாற்றம் ஏற்படும். அது குறித்த விபரத்தை தற்போது வெளியிட முடியாது. அவர் சமுதாய ரீதியாக வலுவாக உள்ளார் என்றார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் பாராட்டு விழா நடத்துவது நல்ல விஷயம். அதற்காக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் கடல் நீரை குடிநீராக மாற்றி விட்டு ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை நிறைவேற்றலாம் என்றார்.
திருச்சி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி எப்போது தொடங்கும் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு சுப்பிரமணியன் சுவாமி பதில் கூறுகையில், ஏப்ரல் 2ஆம் தேதி ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டப் படும். அனைத்து கட்டுமான பொருட்கள் தயாராக இருப்பதால், உடனடியாக அவற்றை கோர்க்கும் பணி தொடங்கும். இரண்டு ஆண்டுகளில் கோவிலை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல் காசி விசுவநாதர் கோவில் பகுதியில் ஒரு பகுதி உடைக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டுள்ளது. அதையும் மாற்றுவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்காக சன்னியாசிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு நான் தலைவராக இருக்கிறேன். பாபர் மசூதியை நான் இடிக்கவில்லை. மக்களாக இணைந்து இடித்தார்கள். அது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது என்றார். திமுக தேர்தல் வியூலத்திற்கு பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு, சுப்பிரமணியசாமி பதில் கூறுகையில், பிரசாந்த் கிஷோர் யார் என்பது எனக்கு தெரியாது. ஒரு அரசியல் தலைவராக இருந்தால் எனக்கு தெரியும். ஆனால் இந்த தேர்தலில் திமுக தோற்க வேண்டும். அதற்கான முயற்சிகளை அனைவரும் இணைந்து மேற்கொள்வோம்
என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், சசிகலா சிறையில் இருந்து வந்தவுடன் மாற்றம் ஏற்படும். அது குறித்த விபரத்தை தற்போது வெளியிட முடியாது. அவர் சமுதாய ரீதியாக வலுவாக உள்ளார் என்றார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் பாராட்டு விழா நடத்துவது நல்ல விஷயம். அதற்காக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் கடல் நீரை குடிநீராக மாற்றி விட்டு ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை நிறைவேற்றலாம் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...

0 comments:
Post a Comment