Wednesday, July 16, 2014
On Wednesday, July 16, 2014 by Anonymous in Break
சென்னை: தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கி 25 ஆண்டுகள் ஆவதையொட்டி இன்று அதன் வெள்ளி விழா தொடங்கியது. இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி தலைமையில் இனிப்பு வழங்கியும், கட்சிக் கொடியேற்றியும் விழா கொண்டாடப்பட்டது. பின்னர் மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், பாமகவை வலுப்படுத்துவது தொடர்பாக வரும் 20ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். தமிழகத்தில் பாமக எப்போதும் ஆரோக்கியமான ஒரு எதிர்க்கட்சியாகவே செயல்பட்டு வருகிறது. 23ஆம் தேதி நடைபெறவுள்ள டெல்டா மாவட்ட விவசாயிகளின் போராட்டத்திற்கு பாமக முழு ஆதரவு அளிக்கும். கட்சி கடந்து வந்த பாதை, சந்தித்த சோதனைகள், பல்வேறு போராட்டங்கள் நடத்தி மக்கள் மனதில் இடம் பெற்றிருப்பதை சுட்டிக்காட்டி தொடர்ந்து மக்கள் பணியை இன்னும் சிறப்பாக நிறைவேற்ற வெள்ளி விழாவில் சபதம் ஏற்போம். இன்று ராயபுரம் சட்ட மன்ற தொகுதியில் சுமார் 250 இடங்களில் கட்சிக் கொடி ஏற்றப்படுகிறது. இதேபோல் 16 தொகுதியிலும் தொடர்ந்து விழாக்கள் நடைபெறும். நாளை ஆர்.கே.நகரில் நடக்கிறது. 1-ந்தேதி சைதாப்பேட்டையில் நிறைவு பெறுகிறது. அனைத்து தொகுதிகளிலும் வருகிற 1-ந்தேதிக்குள் 2500 இடங்களில் கொடி ஏற்றப்படும் என்றார் மூர்த்தி.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை - 3 பேர் காவல்நிலையத்தில் தலையுடன் சரணடைந்தனர். ...
-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருப்பூர் புறநகர் மாவட்டம் சார்பில் மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
0 comments:
Post a Comment