Wednesday, July 16, 2014

On Wednesday, July 16, 2014 by Anonymous in    


சென்னை, ஜூலை.17 - 8 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்களை அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா நேற்று அறிவித்துள்ளார்.
இது குறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:_
காஞ்சிபுரம் மத்தி, திருவள்ளூர் வடக்கு, வேலூர் புறநகர் கிழக்கு, கிருஷ்ணகிரி, திருப்பூர் புறநகர், கோவை மாநகர், கன்னியாகுமரி கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்களாக கீழ்கண்டவர்களுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
காஞ்சிபுரம் மத்திய மாவட்டம் சி.வி.என். குமாரசாமி (செங்கல்பட்டு நகர செயலாளர்),  திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சிறுணியம் பி.பலராமன் (பொன்னேரி முன்னாள் எம்.எல்.ஏ.) வேலூர் புறநகர் கிழக்கு மாவட்டம் என்.ஜி.பார்த்திபன் (மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச்செயலாளர், சோளிங்கர்), கிருஷ்ணகிரி மாவட்டம் வி.கோவிந்தராஜ் (மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர், கிருஷ்ணகிரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்), திருப்பூர் புறநகர் மாவட்டம் பொள்ளாச்சி வ.ஜெயராமன் (தேர்தல் பிரிவு செயலாளர், துணை சபாநாயகர்), கோவை மாநகர் மாவட்டம் கணபதி யூ.ராஜ்குமார் (வடக்கு மண்டல குழுத்தலைவர்), கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் என்.தளவாய்சுந்தரம் (முன்னாள் அமைச்சர்), கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் டி.ஜெங்கின்ஸ் (மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர், குமாரபுரம் பேரூராட்சி செயலாளர், பேரூராட்சி மன்ற 8_வது வார்டு உறுப்பினர்)
அ.தி.மு.க. உடன் பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அ.தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 comments: