Saturday, July 19, 2014
கோவை சின்னியம் பாளையம் விநாயகர் நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி மாரியம்மாள் (வயது 29). இவர்களுக்கு விஷ்ணுபிரியா (4) என்ற மகள் உள்ளார். நாகராஜ் தனது மனைவி மாரியம்மாள், அவரது தங்கை சுப்புலட்சுமி, அவரது கணவர் மாசாண முத்து ஆகியோரை அழைத்துக் கொண்டு ஒரே மோட்டார் சைக்கிளில் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.
அங்கு சுப்புலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் 4 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிள் சின்னியம்பாளையம் பிரிவு அருகே வந்தபோது அந்த வழியாக வந்த கோவை – சேலம் அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் மோதின.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரும் ரோட்டில் தூக்கி வீசப்பட்டனர். ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மாரியம்மாள் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேரும் காயமடைந்தனர். அந்த வழியாக வந்தவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே மாரியம்மாளின் உறவினர்கள் அவரது சடலத்தை நடுரோட்டில் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும் கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாரியம்மாளின் உறவினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
0 comments:
Post a Comment