Saturday, July 19, 2014
கோவை சின்னியம் பாளையம் விநாயகர் நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி மாரியம்மாள் (வயது 29). இவர்களுக்கு விஷ்ணுபிரியா (4) என்ற மகள் உள்ளார். நாகராஜ் தனது மனைவி மாரியம்மாள், அவரது தங்கை சுப்புலட்சுமி, அவரது கணவர் மாசாண முத்து ஆகியோரை அழைத்துக் கொண்டு ஒரே மோட்டார் சைக்கிளில் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.
அங்கு சுப்புலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் 4 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிள் சின்னியம்பாளையம் பிரிவு அருகே வந்தபோது அந்த வழியாக வந்த கோவை – சேலம் அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் மோதின.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரும் ரோட்டில் தூக்கி வீசப்பட்டனர். ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மாரியம்மாள் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேரும் காயமடைந்தனர். அந்த வழியாக வந்தவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே மாரியம்மாளின் உறவினர்கள் அவரது சடலத்தை நடுரோட்டில் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும் கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாரியம்மாளின் உறவினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...
0 comments:
Post a Comment