Thursday, July 17, 2014

On Thursday, July 17, 2014 by Anonymous in    
உலகிலேயே அதிகப்படியான ஏழைகள் இந்தியாவில்தான் உள்ளனர் என்று ஐநா அமைப்புத் தெரிவித்துள்ளது.
உலக நாடுகள் பட்டியலில் அதிக ஏழைகள் உள்ள நாடு என்கிற பட்டியிலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. நேற்று ஐநாவின் புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகள் 2014 என்கிற அறிக்கை டெல்லியில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில், தென் கிழக்கு ஆசியாவில் 1990ம் ஆண்டுகளில் 45 சதவிகிதமாக இருந்த ஏழ்மை நிலை தற்போது 14 சதவிகிதமாகக் குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
மேலும், ஏழ்மை பரவலாக காணப்பட்டாலும் வளர்ச்சி விகிதமும் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது. ஆனால், உலக அளவில் ஏழ்மையின் பங்கு இந்தியாவில்தான் அதிகமாக உள்ளது என்றும், இது சீனா, நைஜீரியா, பங்களாதேஷைக் காட்டிலும் அதிகம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 5 வயதுக்குள்ளான குழந்தைகளின் இறப்பு விகிதத்திலும் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது என்கிற அதிர்ச்சித் தகவலையும் ஐநா வெளியிட்டுள்ள அறிக்கைத் தெரிவிக்கிறது.

0 comments: