Thursday, July 17, 2014
On Thursday, July 17, 2014 by Anonymous in Break

கச்சத்தீவு இந்தியாவிடம்தான் உள்ளது என்று திமுக தலைவர்கருணாநிதி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமானது என்றும், எனவே தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் இளைப்பாற உரிமை உள்ளது என்றும் உச்ச நீதிமன்றத்தில் கருணாநிதி மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவுக்கு மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்து இருந்தது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்துக்கு இரு அரசுகளும் கருணாநிதியின் மனுவுக்கு பதில் தாக்கல் செய்து உள்ளனர். இந்த பதில் மனுவுக்கு கருணாநிதி பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்திருந்தது.
அதற்கு 2 வார கால அவகாசம் கேட்டு இருந்த கருணாநிதி இன்று பதில் தாக்கல் செய்துள்ளார். அந்த பதிலில், கச்சத்தீவு இந்தியாவிடம்தான் உள்ளது என்று பல்வேறு ஆதாரங்களை சுட்டிக்காட்டி விளக்கம் அளித்துள்ளார். கச்சத்தீவை இந்தியா இலங்கை ஆகிய இரு நாடுகளுமே சொந்தமாக கொண்டிருக்கவில்லை என்கிற மத்திய அரசின் பதில் தவறானது என்று கூறியுள்ள கருணாநிதி, கச்சத்தீவில் உள்ள புனித அந்தோனியார் ஆலயம் தமிழக மீனவர் ஒருவரால் கட்டப்பட்டது என்றும், படகு கவிழ்ந்ததால் நீந்தி உயிர் பிழைத்து கச்சத்தீவை அடைந்த அந்த மீனவர் 1917ம் ஆண்டு அந்த ஆலயத்தைக் கட்டினார் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
ராமநாதபுரம் ஜமீன்தார் கச்சத்தீவைக் குத்தகைக்கு விட்டதற்கான ஆவணங்களும் உள்ளன என்று பல்வேறு விளக்கங்களை முன்வைத்துள்ள கருணாநிதி, கச்சத்தீவு இந்தியாவிடம்தான் உள்ளது என்றும், கச்சத்தீவு ஒப்பந்த விஷயத்தில் முறைகள் சரிவர கடைப்பிடிக்கப்படாததால் கச்சத்தீவு தற்போதும் இந்தியா வசம் உள்ளதாகவே கருதப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருப்பூர் புறநகர் மாவட்டம் சார்பில் மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சுங்கச்சாவடிகளில் பிரீபெயிட் கார்ட் வசதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மகாபலிபுரம்...
0 comments:
Post a Comment