Thursday, July 17, 2014

On Thursday, July 17, 2014 by Anonymous in    
உத்திரகண்டில் கடும் மழை காரணமாக நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு புனித யாத்திரைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் உத்தரகண்டில் கடும் மழை காரணமாக அங்கு ஓடும் புனித நதிகளில் வெள்ளம் கரைப்புரண்டு ஓடுகிறது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பல ஊர்களிலும் சாலைகள் சேதமடைந்துள்ளன. கங்கோத்ரி, கேதார்நாத் யாத்திரை செல்லும் பாதைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு, பாதைகள் சீர்குலைந்து கிடக்கின்றன.
யாத்திரிகர்கள் புனிதப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு கங்கோத்ரி, கேதார்நாத் புனித யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தடையை மீறி யாத்திரை புறப்பட்ட 600 பக்தர்களை, ராணுவத் துறை பாதுகாப்பாக மீட்டு தங்கவைத்துள்ளது.

0 comments: